Tuesday, November 27, 2007

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை 2007 காணொளி







மாவீரர் நாள் 2007

தாயக கனவுடன் கல்லறையில் தூங்கும் எம் மாவீர்களுக்கு இந்த ஏதிலியின் தலைகுனிந்த வணக்கங்கள்

Sunday, November 25, 2007

அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம்

நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம்.

ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல்

சுவருக்கு சுவர் எந்த போஸ்டரையும் காண முடியவில்லை சந்திகளில் எந்த கட்டவுட்டையும் சத்தியமாக நான் காணவில்லை.அரசாங்க வாகனங்களை ஆழும் கட்சி தவறுதலாக பயன்படுத்துவதையும் நான் காணவில்லை.அரசியல்வாதிகள் தமது அலுவலகங்கள் வீடுகளில் காட்டவுட்டுகள் போஸ்டர்களை ஒட்டி இருந்தார்கள் மற்றும் வேட்பாலர்களே தெருவீல் நின்று தமக்க்கு பிரச்சாரம் செய்தார்கள் அதுவும் துண்டு பிரசுரங்களை கொடுத்து மிகவும் அமைதியாக பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல்.

மைக் செட் போட்டு காது கிழிய கத்தவில்லை.அல்லது தொண்டர் படைகளை புரியாணி பொட்டலம் கொடுத்தோ சாராயம் கொடுத்தோ தூர தேசங்களில் இருந்து லாறிகள் பஸ்களில் ஆடுமாடுகளை போல ஏற்றி வந்து ஊரெல்லாம் பிரச்சாரகூட்டம் செய்ய வில்லை.தலைவர்கள் பாதுகாப்பு என பில்டப் கொடுத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவில்லை முக்கியமாக அரசியல் கொலைகளோ அரசியல் வன்முறைகளோ நிகழவில்லை தீக்குளிப்பு மண்சோறு சாப்பிடுதல் போன்றவற்றை எந்த தொண்டரும் செய்யவில்லை

இலங்கையில் தேர்தல் என்றால் அதாவது சிங்கள தேசத்தில் வேட்பாளாரின் வீட்டில் தேர்தலுக்கு 1 மாதம் முதலே அன்னதானம் தொடங்கி விடும் அடுத்தவரை திட்டி போஸ்டர் அடிக்கப்பட்டு ஊர் சுவரெல்லாம் நாறடிக்கப்பட்டுவிடும்.எப்படியும் ஒரூ 100 அரசியல் வன்முறையும் கடைசி 10 அரசியல் கொலையாவது நடந்துவிடும்.ஆனால் இவை ஒன்றையும் நான் காணவில்லை ஏன் கேட்கவில்லை

தேர்தல் நாளுக்கு வருவோம்.வாக்களிக்கும்ம் உரிமையுள்ள அத்தனை வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்காவிடின் அபராதம் விதிக்கப்படும் இது அவுஸ்திரேலிய தேர்தல் சட்டம்.அதேபோல எனது வீட்டுக்கு அருகில் அதாவது 50 மீற்றர் தொலைவில் வாக்கு சாவடி இருந்தது அங்கு எந்தவிதா பாதுகாப்பையும் காணவில்லை பொலிஸாரை கண்ணால் கூட காணவில்லை.போட்டியிட்ட இரூ கட்சியினர் வாசலில் நின்று நட்பு பாராட்டி பேசியபடி தமது இறுதிகட்ட பிரச்சாரத்தை மிக மிக அமைதியாக நடத்தி கொண்டிருந்தனர் எந்தவித கள்ள வாக்கும் பதிவாகவில்லை வாக்கு சாவடி ஒன்றும் சூறையாடப்படவும் இல்லை வாக்கு பெட்டிகள் கடத்தபடவும் இல்லை இவை அனைத்தும் பிரமிப்பாக இருந்தது என்னடா நம்ம நாடுகளில் தேர்தல் என்றால் எதிர்கட்சிகாரனை உதைக்க வேண்டும் கள்ளவாக்கு ஒன்றையாவது ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இடவேண்டும் வாக்குசாவடி சூறையாடபட வேண்டும் இவைதானே நம்மூரில் தேர்தலின் நடைமுறை இவை ஒன்றையும் காண முடியாவிட்டால் பிரமிப்பாகத்தானே இருக்கும்


அதை விடுங்கள் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வருவோம்.வெற்றி பெற்றதாக நம்மூரில் அறிவித்தால் என்ன நடக்கும் பட்டாசு வெடிக்கப்படும் இந்த தேர்தல் நீதியற்றது அது அற்றது என தோல்வியற்றவர் அறிக்கைவிடுவார் ஸ்ரண்ட் அடிப்பார் இதுதானே வழமை ஆனால் தொல்வி அடைந்த பிரதமர் ஹவார்ட் எனக்கு மக்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கொடுத்த மக்களுக்கு நன்றிகள் வெற்றிபெற்ற கெவின் ரூட்டுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார் இதை பார்க்கையில் நமது நாடுகள் அதாவது இலங்கை இந்திய அரசியல் எந்த சாக்கடைகுள் இருகின்ரது என புலப்படுகின்றது இதற்கு விடிவு காலமே இல்லையா???

Thursday, November 22, 2007

அநுராதபுரம் விமானபடை தள தாக்குதல் காணொளி களத்தில் இருந்து.........

யூரியுபில் இருந்து





யாழ் இணையத்தின் ஒளித்தடத்தில் இருந்து






Friday, November 16, 2007

IPKF- காணொளிகள்

மிரட்டலுக்கு அடிபணியாத தமிழினத்தலைவன்


என்றும் விலைபோகாத எம் கரிகாலன்


இந்திய படைகளின் காலம்

Wednesday, November 14, 2007

உப்பில் உறைந்த உதிரங்கள் திரைப்படம்

விடுதலைபுலிகளின் ஈருடோக படையின் வெற்றிகர தாக்குதல் பற்றிய உண்மை சம்பவத்தை தழுவிய திரைப்படம்





Tuesday, November 13, 2007

தமிழக உறவுகளுக்கு சகோதரன் வரையும் மடல்

வணக்கம் தமிழக உறவுகளே

உங்கள் எழுச்சியும் உணர்சி வசப்பட்ட உரைகளும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உற்சாகத்தை உண்டாக்குகின்றது.தமிழக தமிழீழ உறவு பலமானது சகோதரபாசமுடையது என்பதனை நிருபிக்கின்றது. அதே வேளை சில அரசியல் சக்திகளின் செயற்பாடுகள் வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல உள்ளது.



தமிழீழ விடுதலைபுலிகள்தான் தமிழீழ தமிழரின் தேசிய இராணுவம் தமிழீழ விடுதலை புலிகள்தான் தமிழீழ மக்களின் அரசியல் பலம் என்பது மறுக்க முடியாத வெளிப்படை உண்மை.இதனை தமிழீழ மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்த்தலை புறக்கணித்ததிலும் சரி கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி நிருபித்து விட்டனர்.

தமிழீழம் என்பது ஒரு இயக்கத்தின் நிலைபாடு அல்ல அது ஈழமக்களின் வாழ்வியல் போராட்டத்தின் முடிவு நாம் 1948ம் ஆண்டு முதல் தாக்கப்பட்டும் கொடுமைப்பட்டும் வந்துள்ளோம் என்பது தாங்கள் அறிந்ததே.1956,1976,1983 ஆகிய வருடங்களில் வகைதொகை இன்றி எம்மக்கள் கொல்லப்பட்டதும் சொத்துகள் அழிக்கப்பட்டதும் நீங்கள் அறியாதது அல்ல அதன் பிறகே தமிழீழ விடுதலைபோராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெட்டுக்கப்பட்டது ஆனால் இலட்சியம் இல்லாத கொள்கை இல்லாத தலைவர்களால் பல்வேறு இயக்கங்கள் சிதைக்கப்பட்டும் வந்ததும் தாங்கள் அறிந்ததே ஆனால் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அன்று தொடக்கம் இன்றுவரை இலட்சியத்தின் மேல் பற்றுகொண்டே இயங்கி வருகிறது தமிழீழ தேசிய இயக்கமாகிய தமிழீழ விடுதலை இயக்கம்

புலி எதிர்ப்பு ஈழ ஆதரவு என்னும் கோசம் என்றுமே எடுபடாது இதுவானது பால் பிடிக்கும் பால் வழங்கும் பசுமாடு பிடிக்காது என்பது போல உள்ளது.ஒட்டு மொத்த ஈழத்தமிழினதின் ஏக இராணுவம் அரசியல் சக்தி பாதுகாவலர்கள் எல்லாம் தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே எமது தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் மட்டுமே இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை எமது தேசிய இயக்கமும் எமது தலைவரும் இல்லாத எந்த ஒரு தீர்வினையும் ஈழமக்கள் எதிர்பார்கமாட்டார்கள் எதிர்பார்க்கவும் இல்லை.இன்றுவரை எமக்காக தமது இன்னுயிர்களை அர்பணிப்பது தமிழீழ விடுதலைபுலிகள் மட்டுமே

இந்தியா தமிழீழ போராட்டத்துக்கு பல்வேறு உதவிகளையும் பல்வேறு தலையீடுகளையும் கடைசியாக பல நெருக்கடிகளையும் தந்தே இருகின்றது இந்திரா அம்மையாரின் தெளிவான அரசியல் பார்வை ஈழ தேசத்தின் மேல் கரிசணையாக இருந்தது.இந்திய அரசியல் தலைவர்களிலும் குறிப்பாக இந்திரா அம்மையார் மீதும் ஈழத்தவர்கள் 80களில் கொண்டிருந்த பாசம் அளப்பரியது.அதே போலவே அண்னா திராவிட முன்னேற்ற கழக முன்னால் தலைவரும் முன்னால் முதல்வருமான மதிப்புக்குரிய மக்கள் திலகம் MGR அவர்களின் உதவிகளை நான் சொல்லியாகவேண்டும்.பல்வேறு சூழ் நிலையில் பல்வேறுபட்ட உதவிகள் நிதி உதவி அரசியல் உதவி ஆகியவற்றை புலிகள் இயக்கத்துக்கு வழங்கினார் அவர் அன்று பாய்சிய பசளையாலேயே ஈழாப்போராட்டம் என்ற ஆலமரம் வளர்ந்து நிற்கின்றது என்பது வெளிப்படை.மக்கள் திலகத்தை ஈழமக்கள் என்னும் இனம் உலகில் இருந்து மறையும் வரை ஈழ சமூகம் என்றுமே மறவாது


மதிப்புகுரிய இளங்கோவன் அவர்கள் சண்டாளர்கள் என புலிகள் இயக்கத்தை கூறி விமர்சித்திருகின்றார்.அது வேதனைய்யாகவே இரூகிறது.80களில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது ஈழமக்கள் இந்திராவின் புதல்வரின் படைகள் வருகின்றன எம்மை நிச்சயம் காப்பாற்றுவார்கள் என நம்பினார்கள்.ஆனால் நடந்தது வேறு 8118 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்,3507 அபலைகள் கற்பழிக்கப்பட்டார்கள்,கிட்ட?்தட்ட 1 மில்லியெண் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டார்கள் 4084 மக்கள் காணாமல் போனார்கள்[ஆதாரம் tchr.net] இழந்த உயிர்களையும் கற்பிழந்த எம் தாய்மார்கள் அக்காமார்களின் துன்பங்களுக்கு யார் காரணம் என சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே



எம் சமூகம் எறும்பினம்தானே அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அவர்களின் உயிர்களின் மதிப்பு குறைந்துவிட்டதாக நினைகிரீர்களா அக்ரோபர் 21ம் திகதி தீபாவளி தினம் 60 உயிர்கள் யாழ்வைத்தியசாலையில் நோயாளர்கள் வைத்தியர்கள் தாதிகள் என இந்திய இராணுவத்தால் பறிக்கப்பட்டனவே அது பயங்கரவாதம் இல்லையா,வல்வெட்டிதுறையில் உயிரோடு நிலத்தில் படுக்க வைத்து டாங்கிகளால் நசுக்கி கொல்லப்பட்டார்களே அது பயங்கரவாதம் இல்லையா?.கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவிமக்களை குறிபாத்து டாங்கிகளால் தாக்கி கொன்றார்களே அது பயங்கரவாதம் இல்லையா.இணுவிலில் தீபாவளி தினத்தன்று இராணுவத்துக்கு பயந்து கோயில்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் வீட்டுகளில் விளக்கேற்ற சென்றபோது சுட்டு கொல்லப்பட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு பின்னால் போட்டு எரித்தார்களே அது பயங்கரவாதமில்லையா

87ம் ஆண்டின் இறுதிப்பகுதி எமது கிராமத்தில் எமது வீட்டில் எமது தந்தையின் சகோதரர்கள் அம்மாவின் சகோதரர்கள் என பலர் கூடி இருந்தோம் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகிய இந்திய அமைதிப்படையினர் அதற்கு பழிதீர்க்க எமது குடும்பத்தினரை வரிசையாக நிற்கவைத்து கொல்லுவதற்கு தயாராக நாய் ஒன்ரு அவர்களை பார்த்து குரைக்க நாய்க்கு வெடிவைக்கும்போது கேட்ட சத்ததில் வந்த ஒரு தமிழக கட்டளை அதிகாரியால் அன்று நாம் காப்பாற்றப்பட்டோம் இது நடக்கும் போது எனது வயது 4 .வைத்தியசாலைக்கு கர்பிணிகளை பிரவசத்துக்கு அனுமதிக்காத இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலால் பல தாய்மார் குழந்தைகளை தமது கருவறையிலேயே பறி கொடுத்தனர் அத்யுமட்டுமல்ல இறந்த குழந்தையை அப்புறப்படுத்த முடியாமல் இரந்த குழந்தைகளை சுமந்தனர் அப்படியும் அப்புறப்படுத்த முடியாமல் பலர் இறந்தனர் அத்தகைய சம்பவம் எனது தாய்கும் நடந்திருந்தது 13 மதங்கள் கருவினை சுமந்தார்.

இவைகளை திரைப்படங்களில் தட்டி கேட்கும் கதாநாயகர்களை நாம் ஹீரோ அந்தஸ்து கொடுகின்றோம் ஆனால் நிஜம் என்னும் வரும்போது ஏன் அரசியல் தடுகின்றது என புரியவில்லை.ஏன் நாம் அழிக்கப்பட வேண்டியவர்களா அல்லது எமது உயிர்கள் என்ன அவ்வளவு மலினமானவையா.ராஜீவின் குடும்பத்துக்கு பாதுகாப்புக்கு என பலகோடிகள் ஒதுக்கப்பட்டன ஆனால் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட கந்தையாவினதும் சுப்பையாவினதும் குடும்பம் சின்னாபின்னமானதை ஏன் சிந்திக்க மறுகின்றீர்கள்.நான் பழையதை கிளறும் நோக்கில் இதனை எழுதவில்லை காங்கிரஸ் கட்டியினரும் பாஜகா கட்சியினரும் ஜெயலலிதா அம்மையாரினதும் எதிர்ப்புகளை செய்து வருவதனால் ஏற்பட்ட ஆதங்கத்தாலே எழுதுகின்றேன்.தயவு செய்து எமது நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள்.ராஜீவ் கொலை யாரால் செய்யப்பட்டது என எமக்கு தெரியாது ஆனால் ஈழத்தவரை 8118 உயிர்களை மறக்க எதிர்பார்கும் நீங்கள் ஒரு துன்பவியல் சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை எதிர்பது கவலையாக இருகின்ரது.



உங்கள் வரிப்பணத்தில் சாவை தழுவிய ஈழத்து பெண்மணி


இன்றைய நேரம் நாம் ஒன்று பட வேண்டிய நேரம் பலகோடி சகோதர சகோதரிகள் 38 மைலுக்கு அப்பால் இருப்பினும் அநாதைகளாகவே நாம் இருகின்றோம் இந்தியா வழங்கிய பல்குழல் ஏவுணை செலுத்தியும் பாக்கிஸ்தான் வழங்கிய பல்குழல் ஏவுகணை செலுத்தியும் அருகருகே வைக்கப்பட்டு தமிழ்மக்களின் உயிர்களை காவுகொள்ள்வதற்காக இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.இதில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒற்றுமையாக செய்யும் ஒரே வேலை ஈழத்தமிழனை அழிக்க ஆயுதம் வழங்குவது மட்டுமே என எண்ண தோன்றுகின்றது.ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழுந்தால் சிங்களம் அஞ்சும் நடுங்கும் எமக்கு தேவை இன்று உங்கள் மனதான ஆறுதலும் ஆதரவுமே ஈழ மக்கள் போராடுவோம் என்று எமது இலட்சியம் எட்டப்படும் வரை ஓயமாட்டோம் அதற்கு எமக்கு பக்கபலனாக உங்கள் ஆதரவை எமக்கு தருவீர்களா காயப்படும் விதமான வார்த்தைகளையும் தவிம்பீர்களா?? இதனை உங்களின் வீட்டில் ஒருவனாக உங்கள் சகோதரனாக உங்களிம் மகனாக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

அன்புடன்
மாறன்

மேலதிக விபரங்களுக்கு

சகோதரி தூயாவின் ஆக்கம் பார்க்க இங்கே கிளிக் செய்க


இந்தியபடையின் நம்பிக்கை எப்படி குலைந்தது என்ற சாத்திரியின் பதிவு


கருத்துபட உதவி-யாழ் இணைய உறவு rajcan

Sunday, November 4, 2007

அன்பின் அண்ணா எப்பொழுது காண்போம் உன்னை





24 ஆண்டுகளாக உன் சேவையை எமக்காக தந்தாய்
இன்று உன்னையே எமக்கு முழுவதுமாய் தந்துவிட்டாய்
புன்னகையாலே எம்மை கவர்ந்தாய்
இன்று உனக்காக கண்ணீர் சிந்துகிறோமே அண்ணா

நாளை மலர இருக்கும் தமிழீழத்துக்கு
உன்னை போன்ற வித்துகள்தானே அண்ணா பசளை
அண்ணா நீ மரணிக்கவில்லை எம் ஒவ்வொருவரிலும்
உயிரோடு புன்னகைத்தபடியே இருகிறாய்