Tuesday, November 27, 2007

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை 2007 காணொளி







மாவீரர் நாள் 2007

தாயக கனவுடன் கல்லறையில் தூங்கும் எம் மாவீர்களுக்கு இந்த ஏதிலியின் தலைகுனிந்த வணக்கங்கள்

Sunday, November 25, 2007

அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம்

நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம்.

ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல்

சுவருக்கு சுவர் எந்த போஸ்டரையும் காண முடியவில்லை சந்திகளில் எந்த கட்டவுட்டையும் சத்தியமாக நான் காணவில்லை.அரசாங்க வாகனங்களை ஆழும் கட்சி தவறுதலாக பயன்படுத்துவதையும் நான் காணவில்லை.அரசியல்வாதிகள் தமது அலுவலகங்கள் வீடுகளில் காட்டவுட்டுகள் போஸ்டர்களை ஒட்டி இருந்தார்கள் மற்றும் வேட்பாலர்களே தெருவீல் நின்று தமக்க்கு பிரச்சாரம் செய்தார்கள் அதுவும் துண்டு பிரசுரங்களை கொடுத்து மிகவும் அமைதியாக பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல்.

மைக் செட் போட்டு காது கிழிய கத்தவில்லை.அல்லது தொண்டர் படைகளை புரியாணி பொட்டலம் கொடுத்தோ சாராயம் கொடுத்தோ தூர தேசங்களில் இருந்து லாறிகள் பஸ்களில் ஆடுமாடுகளை போல ஏற்றி வந்து ஊரெல்லாம் பிரச்சாரகூட்டம் செய்ய வில்லை.தலைவர்கள் பாதுகாப்பு என பில்டப் கொடுத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவில்லை முக்கியமாக அரசியல் கொலைகளோ அரசியல் வன்முறைகளோ நிகழவில்லை தீக்குளிப்பு மண்சோறு சாப்பிடுதல் போன்றவற்றை எந்த தொண்டரும் செய்யவில்லை

இலங்கையில் தேர்தல் என்றால் அதாவது சிங்கள தேசத்தில் வேட்பாளாரின் வீட்டில் தேர்தலுக்கு 1 மாதம் முதலே அன்னதானம் தொடங்கி விடும் அடுத்தவரை திட்டி போஸ்டர் அடிக்கப்பட்டு ஊர் சுவரெல்லாம் நாறடிக்கப்பட்டுவிடும்.எப்படியும் ஒரூ 100 அரசியல் வன்முறையும் கடைசி 10 அரசியல் கொலையாவது நடந்துவிடும்.ஆனால் இவை ஒன்றையும் நான் காணவில்லை ஏன் கேட்கவில்லை

தேர்தல் நாளுக்கு வருவோம்.வாக்களிக்கும்ம் உரிமையுள்ள அத்தனை வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்காவிடின் அபராதம் விதிக்கப்படும் இது அவுஸ்திரேலிய தேர்தல் சட்டம்.அதேபோல எனது வீட்டுக்கு அருகில் அதாவது 50 மீற்றர் தொலைவில் வாக்கு சாவடி இருந்தது அங்கு எந்தவிதா பாதுகாப்பையும் காணவில்லை பொலிஸாரை கண்ணால் கூட காணவில்லை.போட்டியிட்ட இரூ கட்சியினர் வாசலில் நின்று நட்பு பாராட்டி பேசியபடி தமது இறுதிகட்ட பிரச்சாரத்தை மிக மிக அமைதியாக நடத்தி கொண்டிருந்தனர் எந்தவித கள்ள வாக்கும் பதிவாகவில்லை வாக்கு சாவடி ஒன்றும் சூறையாடப்படவும் இல்லை வாக்கு பெட்டிகள் கடத்தபடவும் இல்லை இவை அனைத்தும் பிரமிப்பாக இருந்தது என்னடா நம்ம நாடுகளில் தேர்தல் என்றால் எதிர்கட்சிகாரனை உதைக்க வேண்டும் கள்ளவாக்கு ஒன்றையாவது ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இடவேண்டும் வாக்குசாவடி சூறையாடபட வேண்டும் இவைதானே நம்மூரில் தேர்தலின் நடைமுறை இவை ஒன்றையும் காண முடியாவிட்டால் பிரமிப்பாகத்தானே இருக்கும்


அதை விடுங்கள் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வருவோம்.வெற்றி பெற்றதாக நம்மூரில் அறிவித்தால் என்ன நடக்கும் பட்டாசு வெடிக்கப்படும் இந்த தேர்தல் நீதியற்றது அது அற்றது என தோல்வியற்றவர் அறிக்கைவிடுவார் ஸ்ரண்ட் அடிப்பார் இதுதானே வழமை ஆனால் தொல்வி அடைந்த பிரதமர் ஹவார்ட் எனக்கு மக்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கொடுத்த மக்களுக்கு நன்றிகள் வெற்றிபெற்ற கெவின் ரூட்டுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார் இதை பார்க்கையில் நமது நாடுகள் அதாவது இலங்கை இந்திய அரசியல் எந்த சாக்கடைகுள் இருகின்ரது என புலப்படுகின்றது இதற்கு விடிவு காலமே இல்லையா???

Thursday, November 22, 2007

அநுராதபுரம் விமானபடை தள தாக்குதல் காணொளி களத்தில் இருந்து.........

யூரியுபில் இருந்து





யாழ் இணையத்தின் ஒளித்தடத்தில் இருந்து






Friday, November 16, 2007

IPKF- காணொளிகள்

மிரட்டலுக்கு அடிபணியாத தமிழினத்தலைவன்


என்றும் விலைபோகாத எம் கரிகாலன்


இந்திய படைகளின் காலம்

Wednesday, November 14, 2007

உப்பில் உறைந்த உதிரங்கள் திரைப்படம்

விடுதலைபுலிகளின் ஈருடோக படையின் வெற்றிகர தாக்குதல் பற்றிய உண்மை சம்பவத்தை தழுவிய திரைப்படம்





Tuesday, November 13, 2007

தமிழக உறவுகளுக்கு சகோதரன் வரையும் மடல்

வணக்கம் தமிழக உறவுகளே

உங்கள் எழுச்சியும் உணர்சி வசப்பட்ட உரைகளும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உற்சாகத்தை உண்டாக்குகின்றது.தமிழக தமிழீழ உறவு பலமானது சகோதரபாசமுடையது என்பதனை நிருபிக்கின்றது. அதே வேளை சில அரசியல் சக்திகளின் செயற்பாடுகள் வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல உள்ளது.



தமிழீழ விடுதலைபுலிகள்தான் தமிழீழ தமிழரின் தேசிய இராணுவம் தமிழீழ விடுதலை புலிகள்தான் தமிழீழ மக்களின் அரசியல் பலம் என்பது மறுக்க முடியாத வெளிப்படை உண்மை.இதனை தமிழீழ மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்த்தலை புறக்கணித்ததிலும் சரி கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி நிருபித்து விட்டனர்.

தமிழீழம் என்பது ஒரு இயக்கத்தின் நிலைபாடு அல்ல அது ஈழமக்களின் வாழ்வியல் போராட்டத்தின் முடிவு நாம் 1948ம் ஆண்டு முதல் தாக்கப்பட்டும் கொடுமைப்பட்டும் வந்துள்ளோம் என்பது தாங்கள் அறிந்ததே.1956,1976,1983 ஆகிய வருடங்களில் வகைதொகை இன்றி எம்மக்கள் கொல்லப்பட்டதும் சொத்துகள் அழிக்கப்பட்டதும் நீங்கள் அறியாதது அல்ல அதன் பிறகே தமிழீழ விடுதலைபோராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெட்டுக்கப்பட்டது ஆனால் இலட்சியம் இல்லாத கொள்கை இல்லாத தலைவர்களால் பல்வேறு இயக்கங்கள் சிதைக்கப்பட்டும் வந்ததும் தாங்கள் அறிந்ததே ஆனால் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அன்று தொடக்கம் இன்றுவரை இலட்சியத்தின் மேல் பற்றுகொண்டே இயங்கி வருகிறது தமிழீழ தேசிய இயக்கமாகிய தமிழீழ விடுதலை இயக்கம்

புலி எதிர்ப்பு ஈழ ஆதரவு என்னும் கோசம் என்றுமே எடுபடாது இதுவானது பால் பிடிக்கும் பால் வழங்கும் பசுமாடு பிடிக்காது என்பது போல உள்ளது.ஒட்டு மொத்த ஈழத்தமிழினதின் ஏக இராணுவம் அரசியல் சக்தி பாதுகாவலர்கள் எல்லாம் தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே எமது தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் மட்டுமே இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை எமது தேசிய இயக்கமும் எமது தலைவரும் இல்லாத எந்த ஒரு தீர்வினையும் ஈழமக்கள் எதிர்பார்கமாட்டார்கள் எதிர்பார்க்கவும் இல்லை.இன்றுவரை எமக்காக தமது இன்னுயிர்களை அர்பணிப்பது தமிழீழ விடுதலைபுலிகள் மட்டுமே

இந்தியா தமிழீழ போராட்டத்துக்கு பல்வேறு உதவிகளையும் பல்வேறு தலையீடுகளையும் கடைசியாக பல நெருக்கடிகளையும் தந்தே இருகின்றது இந்திரா அம்மையாரின் தெளிவான அரசியல் பார்வை ஈழ தேசத்தின் மேல் கரிசணையாக இருந்தது.இந்திய அரசியல் தலைவர்களிலும் குறிப்பாக இந்திரா அம்மையார் மீதும் ஈழத்தவர்கள் 80களில் கொண்டிருந்த பாசம் அளப்பரியது.அதே போலவே அண்னா திராவிட முன்னேற்ற கழக முன்னால் தலைவரும் முன்னால் முதல்வருமான மதிப்புக்குரிய மக்கள் திலகம் MGR அவர்களின் உதவிகளை நான் சொல்லியாகவேண்டும்.பல்வேறு சூழ் நிலையில் பல்வேறுபட்ட உதவிகள் நிதி உதவி அரசியல் உதவி ஆகியவற்றை புலிகள் இயக்கத்துக்கு வழங்கினார் அவர் அன்று பாய்சிய பசளையாலேயே ஈழாப்போராட்டம் என்ற ஆலமரம் வளர்ந்து நிற்கின்றது என்பது வெளிப்படை.மக்கள் திலகத்தை ஈழமக்கள் என்னும் இனம் உலகில் இருந்து மறையும் வரை ஈழ சமூகம் என்றுமே மறவாது


மதிப்புகுரிய இளங்கோவன் அவர்கள் சண்டாளர்கள் என புலிகள் இயக்கத்தை கூறி விமர்சித்திருகின்றார்.அது வேதனைய்யாகவே இரூகிறது.80களில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது ஈழமக்கள் இந்திராவின் புதல்வரின் படைகள் வருகின்றன எம்மை நிச்சயம் காப்பாற்றுவார்கள் என நம்பினார்கள்.ஆனால் நடந்தது வேறு 8118 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்,3507 அபலைகள் கற்பழிக்கப்பட்டார்கள்,கிட்ட?்தட்ட 1 மில்லியெண் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டார்கள் 4084 மக்கள் காணாமல் போனார்கள்[ஆதாரம் tchr.net] இழந்த உயிர்களையும் கற்பிழந்த எம் தாய்மார்கள் அக்காமார்களின் துன்பங்களுக்கு யார் காரணம் என சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே



எம் சமூகம் எறும்பினம்தானே அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அவர்களின் உயிர்களின் மதிப்பு குறைந்துவிட்டதாக நினைகிரீர்களா அக்ரோபர் 21ம் திகதி தீபாவளி தினம் 60 உயிர்கள் யாழ்வைத்தியசாலையில் நோயாளர்கள் வைத்தியர்கள் தாதிகள் என இந்திய இராணுவத்தால் பறிக்கப்பட்டனவே அது பயங்கரவாதம் இல்லையா,வல்வெட்டிதுறையில் உயிரோடு நிலத்தில் படுக்க வைத்து டாங்கிகளால் நசுக்கி கொல்லப்பட்டார்களே அது பயங்கரவாதம் இல்லையா?.கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவிமக்களை குறிபாத்து டாங்கிகளால் தாக்கி கொன்றார்களே அது பயங்கரவாதம் இல்லையா.இணுவிலில் தீபாவளி தினத்தன்று இராணுவத்துக்கு பயந்து கோயில்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் வீட்டுகளில் விளக்கேற்ற சென்றபோது சுட்டு கொல்லப்பட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு பின்னால் போட்டு எரித்தார்களே அது பயங்கரவாதமில்லையா

87ம் ஆண்டின் இறுதிப்பகுதி எமது கிராமத்தில் எமது வீட்டில் எமது தந்தையின் சகோதரர்கள் அம்மாவின் சகோதரர்கள் என பலர் கூடி இருந்தோம் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகிய இந்திய அமைதிப்படையினர் அதற்கு பழிதீர்க்க எமது குடும்பத்தினரை வரிசையாக நிற்கவைத்து கொல்லுவதற்கு தயாராக நாய் ஒன்ரு அவர்களை பார்த்து குரைக்க நாய்க்கு வெடிவைக்கும்போது கேட்ட சத்ததில் வந்த ஒரு தமிழக கட்டளை அதிகாரியால் அன்று நாம் காப்பாற்றப்பட்டோம் இது நடக்கும் போது எனது வயது 4 .வைத்தியசாலைக்கு கர்பிணிகளை பிரவசத்துக்கு அனுமதிக்காத இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலால் பல தாய்மார் குழந்தைகளை தமது கருவறையிலேயே பறி கொடுத்தனர் அத்யுமட்டுமல்ல இறந்த குழந்தையை அப்புறப்படுத்த முடியாமல் இரந்த குழந்தைகளை சுமந்தனர் அப்படியும் அப்புறப்படுத்த முடியாமல் பலர் இறந்தனர் அத்தகைய சம்பவம் எனது தாய்கும் நடந்திருந்தது 13 மதங்கள் கருவினை சுமந்தார்.

இவைகளை திரைப்படங்களில் தட்டி கேட்கும் கதாநாயகர்களை நாம் ஹீரோ அந்தஸ்து கொடுகின்றோம் ஆனால் நிஜம் என்னும் வரும்போது ஏன் அரசியல் தடுகின்றது என புரியவில்லை.ஏன் நாம் அழிக்கப்பட வேண்டியவர்களா அல்லது எமது உயிர்கள் என்ன அவ்வளவு மலினமானவையா.ராஜீவின் குடும்பத்துக்கு பாதுகாப்புக்கு என பலகோடிகள் ஒதுக்கப்பட்டன ஆனால் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட கந்தையாவினதும் சுப்பையாவினதும் குடும்பம் சின்னாபின்னமானதை ஏன் சிந்திக்க மறுகின்றீர்கள்.நான் பழையதை கிளறும் நோக்கில் இதனை எழுதவில்லை காங்கிரஸ் கட்டியினரும் பாஜகா கட்சியினரும் ஜெயலலிதா அம்மையாரினதும் எதிர்ப்புகளை செய்து வருவதனால் ஏற்பட்ட ஆதங்கத்தாலே எழுதுகின்றேன்.தயவு செய்து எமது நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள்.ராஜீவ் கொலை யாரால் செய்யப்பட்டது என எமக்கு தெரியாது ஆனால் ஈழத்தவரை 8118 உயிர்களை மறக்க எதிர்பார்கும் நீங்கள் ஒரு துன்பவியல் சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை எதிர்பது கவலையாக இருகின்ரது.



உங்கள் வரிப்பணத்தில் சாவை தழுவிய ஈழத்து பெண்மணி


இன்றைய நேரம் நாம் ஒன்று பட வேண்டிய நேரம் பலகோடி சகோதர சகோதரிகள் 38 மைலுக்கு அப்பால் இருப்பினும் அநாதைகளாகவே நாம் இருகின்றோம் இந்தியா வழங்கிய பல்குழல் ஏவுணை செலுத்தியும் பாக்கிஸ்தான் வழங்கிய பல்குழல் ஏவுகணை செலுத்தியும் அருகருகே வைக்கப்பட்டு தமிழ்மக்களின் உயிர்களை காவுகொள்ள்வதற்காக இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.இதில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒற்றுமையாக செய்யும் ஒரே வேலை ஈழத்தமிழனை அழிக்க ஆயுதம் வழங்குவது மட்டுமே என எண்ண தோன்றுகின்றது.ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழுந்தால் சிங்களம் அஞ்சும் நடுங்கும் எமக்கு தேவை இன்று உங்கள் மனதான ஆறுதலும் ஆதரவுமே ஈழ மக்கள் போராடுவோம் என்று எமது இலட்சியம் எட்டப்படும் வரை ஓயமாட்டோம் அதற்கு எமக்கு பக்கபலனாக உங்கள் ஆதரவை எமக்கு தருவீர்களா காயப்படும் விதமான வார்த்தைகளையும் தவிம்பீர்களா?? இதனை உங்களின் வீட்டில் ஒருவனாக உங்கள் சகோதரனாக உங்களிம் மகனாக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

அன்புடன்
மாறன்

மேலதிக விபரங்களுக்கு

சகோதரி தூயாவின் ஆக்கம் பார்க்க இங்கே கிளிக் செய்க


இந்தியபடையின் நம்பிக்கை எப்படி குலைந்தது என்ற சாத்திரியின் பதிவு


கருத்துபட உதவி-யாழ் இணைய உறவு rajcan

Sunday, November 4, 2007

அன்பின் அண்ணா எப்பொழுது காண்போம் உன்னை





24 ஆண்டுகளாக உன் சேவையை எமக்காக தந்தாய்
இன்று உன்னையே எமக்கு முழுவதுமாய் தந்துவிட்டாய்
புன்னகையாலே எம்மை கவர்ந்தாய்
இன்று உனக்காக கண்ணீர் சிந்துகிறோமே அண்ணா

நாளை மலர இருக்கும் தமிழீழத்துக்கு
உன்னை போன்ற வித்துகள்தானே அண்ணா பசளை
அண்ணா நீ மரணிக்கவில்லை எம் ஒவ்வொருவரிலும்
உயிரோடு புன்னகைத்தபடியே இருகிறாய்

Saturday, October 27, 2007

நன்றி இந்தியா தொடர்க ஈழத்தமிழருக்கு உன் சேவைகளை

எதிரியாக இருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தமது நாட்டு பாதுகாப்புக்கு உருவாக்கும் ஆயுதங்கள் அதாவது எதிரி நாடுகளின் ஆயுதங்கள் நட்பு பாராட்டி செயற்படுவது தமிழனை கொல்லத்தான் என்பது உண்மை.இரு துருவங்களாக இருக்கும் நாடுகள் ஒற்றுமையாக செய்யும் ஒரே செயல் ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் வழங்குவதே.இந்திய மல்ரிபரலும் பாக்கிஸ்தான் மல்ரிபரலும் அருகருகே இருந்து தமிழின கொலைகளை செய்வது வேடிக்கை அதிசயம்.

மல்ரி பரல் என்றால் என்ன

12 ராக்கடுகளை 40 செக்கணில் செலுத்த கூடிய ஒரு பேரழிவு ஆயுதம் 3.9 சதுர கிலோமீற்றரை துவம்சம் செய்ய கூடியது

இலங்கை அரசு பயண்படுத்தும் இந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி




Sri Lankan army use Multi Barrel Rocket Launcher.
multiple rocket launcher developed by the DRDO for the Indian
Army. Development began in 1983. The system has a maximum more...
range of 39-40 km, fire a salvo of 12 HE rockets in under 40
seconds, with a beaten zone of 3.9 square kilometres. The
system is mounted on a Tatra truck for mobility. The entire
system consists of a launch vehicle, loader/refill vehicle,
and a command vehicle with a battery of six launchers.

இன்று 21 வேங்கைகளின் உயிர் கொடையால் தாக்கி அழிக்கப்பட்ட விமானப்படையின் இழபீட்டினை கட்டியெழுப்ப இந்தியா உதவ போகின்றதாம் நல்லது ஆயுத்ஹம் கொடுக்க டெல்லியில் கொடைவள்ளல்கள் இருகின்றனர் ஈழத்தில் கொல்லப்பட நாம் இருகின்றோம் அல்லவா கோடான கோடி நன்றிகள் இந்த உதவியை நாம் என்றும் மறவோம்

இந்தியா இலங்கைக்கு போட்ட பிச்சையால் இந்தியா எமக்களித்த பரிசின் படங்கள் சில உங்களுக்காக










7 கோடி சகோதர சகோதரிகள் இந்தியாவில் இருந்தும் நான் அநாதைகளாகத்தான் இருகின்றோம் எதையும் கட்டுப்படுத்தும் அரசியல் பலம் தமிழர்களிடம் இருந்தும் எம்மை கொல்ல ஆயுதம் வழங்கப்படுத்தான் கொண்டிருகிறார்கள் ஏன் நாம் என்ன பலியிடப்படும் ஆடுகளா?எமகேன மானத்தோட வாழ சிந்தித்தது தப்பா?குட்ட குட்ட குனிய வேண்டும் என்பது போல இருகாது திரும்ப ஓங்கி குத்துவதுதான் தவறா?

ஏன் உதவாவிட்டாலும் உபத்திரம் செய்கிறார்கள் இந்திய ஆளும் வர்கத்தினர்?????

உலகமயமாக்கல் என்கின்றீர்கள் ஆனால் நீங்கள் கொடுத்த ஆயுதத்தால் 300கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அதாவது சொந்த மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வருமாணம்தான் முக்கியம் அப்படித்தானே ??? ஆடு நனையுது என ஓநாய் அழுகிறது என நீங்கள் நினைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு தமிழனின் அநியாயசாவினையும் தட்டி கேட்கும் உரிமை எனக்கு இருக்குது சகோதரன் என்ற ரீதியில் வாய்வீச்சுக்கு சகோதரன் எனவில்லை அடிமனதில் இருந்தே சொல்கின்றேன்


உலகமயமாக்கல் வர்த்தகம் என நீங்கள் சொல்வீர்களாயிருப்பின் தமிழர் தரப்பு உங்களிடம் ஆயுதம் வாங்க தயாராக இருகின்றது எந்த கடனும் இல்லாமல் எத்தினை கோடி என்றாலும் தயார் விற்க நீங்கள் தயாரா??



மீண்டும் நன்றி இந்தியா இன்னும் கொல்ல ஆயுதங்களை வழங்குங்கள் !!!!!!!

அநுராதபுர அதிர்வு - அவசிய அறிக்கை - 10

ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல்

Thursday, October 25, 2007

இதிலை இருப்பவையில் அநேகமானதை காணவில்லையாம் கண்டனியளோ







நீங்கள் கண்டிருப்பின் இலங்கையில் இருப்பின் 116 வெளிநாட்டில் இருப்பின் 0094116 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவியுங்கள்

நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

Monday, October 22, 2007

மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இந்த ஓட்டைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும் சிங்கங்கள்




களமாடி விடுதலை கனவுடன் மீளாத்துயிலில் இருக்கும் வீர வீராங்கனைகளே!
களமாடி மரணித்த வீர வேங்கைகளுக்கு நன்றியுடன் கலந்த வீர வணக்கங்கள் உங்களை என்றும் மறவோம் என்றும் தலமையின் கீழ் அணிவகுத்து தலமையின் கரங்களை பலப்படுத்துவோம்.
சில சந்தர்பவாதிகளுக்கு!
இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யபோகின்றோம் இவர்கள் எமக்காக உலகிலேயே பெரிய தானமாகிய உயிர்தானத்தை செய்துள்ளார்கள் என்றைக்கும் எமது தலமைமீதும் எமது இயக்கத்தின் மீதும் நம்பிக்கைவைத்து சோர்வடையும் செய்திகள் என கூலாக உல்லாசமாக இருந்து என்னப்பா இயக்கம் கிழக்கில வீக்காம் கிழக்கு போச்சு இனி வன்னியுமா என கேட்பதை விடுத்து[என்னிடம் சொன்னவர்கள் இருகின்றார்கள்] ஒவ்வொரு வீரனும் எமக்காக செய்யும் தியாகங்களை கொச்சை படுத்தாமல் என்றும் தலமையின் பின் அணிசேர்வோம் எம்மாலான அனைத்துவிதமான உதவிகளையும் தயக்கமின்றி செய்ய முன்வாருங்கள்.தமிழரின் ஒவ்வொரு அங்குல வெற்றியும் ஒவ்வொரு உயிர்கொடையாலேயே உருவாகின்றது

Sunday, October 21, 2007

இந்திய கோரமுகத்தின் 20 ஆண்டு நிறைவு நாள்




எந்தவிதமான பயங்கரவாதியும் மதிப்பளிக்கும் இடம் வைத்தியசாலை ஆனால் 21/10/2007 அன்று அகிம்சை தேசத்தின் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் அட்டூழியம் செய்த படைகளால் வைத்தியர் தாதியர் நோயாளர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர் என எந்த பாகுபாடு காட்டாமல் சன்னங்களால் துளைத்து பலியெடுத்த 20 ஆண்டு நாள் இன்று அன்று ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்தால் தம் உயிரை துறந்த எம் உறவுகளுக்கு 20வது ஆண்டு நினைவஞ்சலிகளை மிக்க வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்

Incomplete list of the media coverage on the incident


:http://www.tamilnation.org/indictment/indict047.htm
http://www.sangam.org/articles/view/?id=360
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13203
http://www.ltteps.org/?view=1736&folder=25

Thursday, October 18, 2007

சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்து



படத்தின் மேல் கிளிக் செய்து பெருதாக்கி பாருங்கள்

Sunday, October 14, 2007

ஒவ்வொரு தமிழனும் பார்க வேண்டிய காணொளி



இந்த காட்டெருமைகளுக்கு இருக்கும் ஒற்றுமை எம்மிடம் ஏன் இல்லாமல் போனது???????

Friday, October 12, 2007

மகிந்தவின் இந்தியப் பயணம்: தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

மகிந்தவின் இந்தியப் பயணம் தொடர்பில் தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


யாழ். பொதுமக்களின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எமது தேசத்தில் தமிழ் மக்கள் மீதான மனிதவதை இப்போது உச்சத்தாண்டவம் ஆடுகின்றது. காலங்காலமாகத் தமிழின அழிப்பையே கையிலெடுத்து அரியாசனமேறி, ஆட்சி நடத்தும் சிங்கள இனவெறித் தலைவர்களின் வழிவந்த மகிந்த ராஜபக்ச, தனது இனத்தின் 85 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆசீர்வாதத்தோடு உச்சக்கட்ட மனித வதையை எம்மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் எம்மவர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், கோவில்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் சுட்டுக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்களாகக் கிடக்கின்றார்கள். பாதுகாப்புத் தேடி வேறு வழியற்று சிறைச்சாலைகளில் தஞ்சம் புகுகின்றார்கள்.

எமது பெண்கள் சிங்களப் படைச் சிப்பாய்களின் காமவெறிக்கு இரையாக்கப்படுகின்றார்கள்.

இன்று யாழ்ப்பாணக் குடாநாடு சிறிலங்காவின் ஒரு சிறைச்சாலை. உலகத்தில் மனித வதைகளுக்குப் புகழ்பெற்ற பல்வேறு சிறைச்சாலைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றிற்கு எந்த வகையிலும் குறைந்துவிடாத அல்லது அதற்கும் மேலான வதைகள் நடக்கும் சிறைச்சாலையொன்றில் நாங்கள் வாழ்கின்றோம்.

எங்களைச் சுற்றிலும் 40,000-க்கும் மேற்பட்ட இனவெறிச் சிப்பாய்கள் நவீன ஆயுதங்கள் தாங்கி நிற்கின்றன.

வீதிகள் தோறும், ஊர்கள் தோறும் நெருக்கமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்மைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு மனிதத் தன்மையற்ற பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எம்மை பல்வேறு வழிகளாலும் அழித்தொழிப்பதையே அவர்கள் தினந்தோறும் செய்து வருகின்றார்கள்.

கடந்த இரு மாதத்தில் வெளித்தெரிய வந்த தகவல்களின்படி மட்டும் எம்மில் 59 பேர் கொல்லப்பட்டார்கள். 37-க்கும் மேற்பட்டோர் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டு விட்டார்கள். உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் தினந்தேறும் குடும்பமாகவும் தனித்தனியாகவும் சிறைச்சாலைகளில் தஞ்சமடைவோர் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அங்கும் அவர்கள் சிறிலங்கா அதிகாரிகளாலும், காவல்துறையினராலும் மோசமாக வதைக்கப்படுகிறார்கள்.

எமது வதையின் கதை இப்படியிருக்க கிழக்கு மாகாணத்திலே எமது உறவுகளின் நிலையோ வார்த்தைகளுக்குள் உட்படுத்த முடியாது கோரமாக உள்ளது.

அங்கு அவர்களது சமூகக் கட்டுமானங்கள் யாவும் உடைக்கப்பட்டு எந்தவிதமான தகவல்களும் வெளிவராதவாறு செய்யப்பட்ட நிலையில் இனவெறியாட்டம் நடக்கிறது. தமிழ் மக்களின் உயிர்கள் வகை தொகையின்றி உறிஞ்சப்படுகின்றன. வீடுகள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் காணிகள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படுகின்றன. வதையுறும் அம் மக்களின் அவலக்குரல் எவருக்கும் கேட்கவே இல்லை.

சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சிறிலங்காவின் தலைநகரில் கூட தமிழர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் கூட இதற்கு விதிவிலக்காகவில்லை. இதனைவிட அங்கும் தமிழர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், அவர்களது பணம் வருத்திப் பறிக்கப்படுகிறது. அண்மையில் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக ஒரு இரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதிலிருந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றத்துடன் அவர்கள் வாழ்வும் நகர்கிறது.

எம்மீது இத்தனை கொடூரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிறிலங்காத் தலைவர் ஆறு கோடி தமிழர்கள் வாழும் மண்ணில் மீண்டும் ஒருமுறை காலடி எடுத்து வைக்க இருக்கிறார். எம்மை அழிப்பதற்கான கருத்தியல் ஆதரவோ, பொருளாதார ஆதரவோ, படைக்கல உதவிகளோ தேவைப்படும் போதெல்லாம் அவர் ஓடோடி வரும் முதல் நாடாக இந்தியா இருப்பது தான் எம்மை மீளாத வேதனையுள் ஆழ்த்தியுள்ளது.

இத்தனை காலமும் எம்மீதான அழிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சிறிலங்காவிற்கு உதவி வந்தன. ஆனால், தற்போது மகிந்த அரசின் மனித வெறியாட்டக் கோரங்கள் அப்பட்டமாக வெளிவந்த நிலையில் அந்நாடுகள் சங்கடத்திற்கு உள்ளாகி நிற்கின்றன. சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் என சர்வதேச சமூகமே ஒன்றிணைந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நிற்கின்றன. அதனால் வெளிப்படையான படைத்துறை உதவிகளைக் கூட பலவேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. அமெரிக்கா நாடு கூட சிறிலங்காவிற்குப் படைத்துறை உதவிகளை நிறுத்தவுள்ளதான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட சர்வதேச மட்டத்திலான பயணங்களை மேற்கொண்டு தனது கொடூரமுகத்தை மூடிமறைக்கப்படாத பாடுபட்ட மகிந்த அவற்றில் பாரிய தோல்வியையே சந்த்தித்தார்.

சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சிங்களத்தலைவர் தனது தமிழின அழிப்பிற்கு உதவி கோரி இப்போது உங்களது தேசத்திற்கு வந்திருக்கிறார். எப்போதும் போல இந்தியாவை ஏமாற்றித் தனக்கான உதவிகளைப் பெற்றுவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை அவருக்கு உண்டு.

"எங்களுக்கு உலகில் எவருமில்லை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆறுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள்" என்று எப்போதும் சிங்களவர்கள் கூறிக்கொள்வார்கள். நாமும் இங்கு துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்கு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மனதைத் தேற்றிக்கொள்வோம்.

என்றோ ஒரு நாள் எங்களுக்காகப் பொங்கியெழுந்து வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எஞ்சிய உயிரைப் பிடித்தபடி இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம். ஆனால், அப்பட்டமான மனித வதைகளுக்காக அமெரிக்காவின் முகத்தில் முழிப்பதற்கே திண்டாடும் சிங்களத் தலைவர் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்திய மண்ணிற்குத் தேவைப்படும் போதெல்லாம் வந்து ஆதரவுபெற்று வருவது எம்மைத் துயரத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது.

நாம் எமது உயிரினும் மேலாக நேசிக்கும் எமது உறவுகளே! தமிழர்கள் என்பதற்காக எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள், குழந்தைகள் பட்டினி போடப்படுகிறார்கள், இளைஞர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். அல்லது அதற்காக எங்கோ கடத்திச் செல்லப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களிலிருந்து எதுவுமற்ற ஏதிலிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எமது இனமே அழித்தொழிக்கப்படும் நிலையிலுள்ளது. எமது அழிவிற்கான ஆதரவும் உதவிகளும் நீங்கள் வாழும் பாரத தேசத்திலிருந்து எமது கொலையாளிகளின் கைகளுக்குக் கிட்டுவதை நாம் ஆத்மார்த்தமாக விரும்பவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/index.php?cn=33788

Tuesday, September 11, 2007

லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்"

இந்த கட்டுரையை நான் வரையவில்லை ஈழத்தமிழ்.கொமில் பார்த்திருந்தேன் இந்த மாவீரனது வரலாறினை எனது வலைபூவில் இடுவதற்கு பெருமகிழ்சி அடைகின்றேன் இதனை எழுதிய தூயவனுக்கும் இதன் மூலத்தை பிரசுரித்த விடுதலைபுலிகள் ஏட்டுக்கும் அதனை மறு பிரசுரம் செய்த ஈழத்தமிழ் இணையத்துக்கும் எனது மனமர்ந்த நன்றிகள்


லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்"(கனகரட்ணம் ஸ்ரான்லி யூலியன்)பாலக்குழி, அடம்பன், மன்னார்பிறப்பு: 25.05.1974வீரச்சாவு: 11.08.2006இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து தேசபக்தர்களை வேட்டை யாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி 'கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்? என ஏசுகின்றார். 'நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்' என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான். 'அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்' என அனுமதி கேட்கின்றான். அன்னை மொனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்' என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. 'நீ வீட்ட திரும்பிப் போ' என கூறுகின்றார். 'இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்'. என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் 'ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக் கிட்டவன்' எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை 'பூட்டோ' எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது.

இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங் களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப்பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவு தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான்.

இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித் தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற் தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது.

ஷபூட்டோ... 'பூட்டோ!' என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக் கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான். இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடைவெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்ல வும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.

ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப் புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின.விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. 'தொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம்' என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். 'நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' என கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பச் சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்.''நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான்.

பல மாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத் திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான்.இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும். .

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது.

எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர்.கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களி னுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகி விடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது.அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந் திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப் பட்டது.

அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத் தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான்.பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.Sம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி.


இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் 'பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது'வென கேட்க 'யாரு "கரும்புலி பூட்டோவா!"' என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள். அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள்...


வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் 'புயல் புகுந்த பூக்கள்' என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும் புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்஼br />து. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலை யைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்ட஼br />ருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. 'நம்பர் வண்' தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு "உதாரண புருசனை" பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டு கின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.- விடுதலைப் புலிகள், மாசி 2007

Tuesday, September 4, 2007

ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 04.09.2007

ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை

படுகொலைகளும் மனிதவுரிமை மீறல்களும் சாதாரணமாக நடந்துவரும் இலங்கையின் பக்கம் சர்வதேசத்தினதும் மனிதவுரிமை ஆர்வலர்களினதும் பார்வை திரும்பி இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்தே வருகின்றது. இவ்வளவு காலமும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நடத்தி வந்தபோதும், அதனை கண்டிக்க எந்த அமைப்போ அல்லது நாடுகளோ மனதார முன்வரவில்லை தம் பிராந்திய நலனுகாகவும் தம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் படுகொலைகளையும் மனிதவுரிமைகளையும் அடக்கு முறைகளையும் கண்டும் காணாதது போல் இருந்தே வந்தன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அடக்கு முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நாடுகளே, இன்னொரு அடக்கப்படும் இனத்தின் விடுதலைகாய் காத்திரமான பங்களிப்பை வழங்காதது கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.

தற்போது ஐ.நா.வின் பங்களிப்பும் கரிசனையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கி இருப்பது, சிங்கள இனவாதிகளுக்கு கசப்பான செய்தியே. தம் பிரதிநிதியை ஐ.நா. செயலாலராக்க எடுத்த முயற்சியில் இலங்கை அரசு படு தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல தம் இனப்படுகொலைகளையும் தமிழினத்தின் மேலான அடக்கு முறையையும் உலகுக்கு மறைக்கும் முயற்சியில் தோல்வியுற்று உள்ளது என்பது மிகப்பொருந்தும். தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்த இலங்கையின் உண்மை முகம் வெளிப்படதொடங்கி இருக்கின்றது. இதற்கு புலிகளின் ராஜதந்திர நகர்வுகளும், புலம் பெயர் மக்களின் முயற்சியும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் என சொல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சரின் செயளாளருமான கோத்தபாய ராஜபக்ஸ ரொயிட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நாவில் புலிகள் ஊடுறுவி இருக்கின்றார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இவ் பேட்டியானது ஒரு உயர் ராஜதந்திரி ஒருவரின் பொருப்பற்ற செயலையே காட்டி நிற்கின்றது. ஐ.நா.வை சாடுவது இது முதல் முறை அல்ல. ஒரு முறை லக்ஸ்மன் கதிர்காமர் கூட ஐ.நா. கொசு மருந்தடிக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும் என ஏளனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது போக அண்மையில் இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரான ஜெயராஞ் பெனான்டோ பிள்ளை ஐ.நா. அதிகாரியான ஜோன் கோல்மஸ் அவர்களை புலிகளிடம் பணம் வாங்கிய ஒரு பயங்கரவாதி என விமர்சித்துள்ளதானது இலங்கை அரசின் ஐ.நா. மீதான காழ்புனர்ச்சியையும் சிறீலங்கா அரசின் இயலாமையையும் தெளிவாக காட்டுகின்றது. தமக்கு ஆதரவாக அறிக்கை விடும் அதிகாரிகள் நல்லவர்கள் மற்றையவர்கள் பயங்கரவாதிகள், பணம் வாங்கிய ஊழல் பேர்வளிகள் என பொருள்படும் விதமாக கருத்தினை தெரிவித்து வருவது குறிப்பிட தக்கது

அப்படிப்பட்ட காட்டமான அறிக்கைகளையும், கோமாளித்தனமான கருத்துகளையும் சிறீல‌ங்கா அர‌சிய‌ல்வாதிக‌ள் வெளியீட்டு வ‌ந்தபோதும் ஐக்கியநாடுகள் அதனைக்கேட்டு பொங்கி எழுந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக தம் பக்க சார்பில் காரசாரமாக எந்தவொரு கண்டனத்தையோ, கண்டிப்பையோ காட்டாமல் மெளனம் சாதிக்கின்றனர். அத‌ன் ந‌டைமுறை செயற்பாடுகளில் எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌லே ஐ.நா. இய‌ங்குவ‌து வேத‌னைக்குரிய‌து. த‌ன் தூதுவ‌ர் ஒருவ‌ரையே க‌பின‌ட் அமைச்ச‌ர் ஒருவ‌ர் கையூட்டு பெற்ற‌வ‌ர் என‌ விம‌ர்சிக்கும் அதே த‌ருண‌த்தில் ஐ.நாடுகள் எத்த‌கைய‌ ஒத்துழைப்பையும் தாம் வ‌ழ‌ங்க‌ த‌யாராக‌ இருக்கின்றோம் என‌ அறிக்கைக‌ளை விடுத்து கொண்டு, பெய‌ருக்கு ம‌ட்டும் அறிக்கைக‌ளை விடுத்து த‌ன்னைத்தானே சிறுமைப்ப‌டுத்துகின்ற‌து ஐ.நா. என‌ எண்ண‌த் தோன்றுகின்ற‌து. வேறு நாடுக‌ளில் இதே போன்ற‌ ஒரு பிர‌ச்சினை வ‌ந்திருந்தால் இதேபோல‌ அறிக்கைக‌ளை ம‌ட்டும் விடுத்திருக்குமா ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை.

க‌ட‌ந்த‌வார‌ம் நில‌வ‌ர‌ம் நிக‌ழ்சியில் புலிக‌ளின் ப‌டைத்துறை பேச்சாள‌ர் ராசையா இள‌ந்திரைய‌ன் அவ‌ர்க‌ள் ஜ‌நாவின் செய‌ற்பாடுக‌ளில் இருக்கும் தொய்வுக‌ளை ந‌ன்கு சுட்டி காட்டி இருந்தார்.
ஐ.நா. விசேட‌ தூதுவர் ஐ.நாடுகளுக்குள் ஊடுறு தவறான தகவல்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ஐ.நா. பணியாளர்களின் நிலை, இன்னும் நாட்க‌ள் செல்ல‌ ஐ.நாவே புலிக‌ளின் துணை அமைப்பு என‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் அறிக்கை விடும் தூர‌ம் அதிக‌ தூர‌த்தில் இல்லை.


சிறீலங்கா அரசு, ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக் காட்டியுள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால், தனது அரச பயங்கரவாதச் செயல்களை நாளாந்தம் நடாத்திக் கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கின்ற சிங்களச் சிறிலங்கா அரசு, இன்று தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் விரட்டியடிக்கின்றது.

இத்தகைய கொடூரங்களைத் தடுத்து நிறுத்துவதற்கோ, குற்றமிழைப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ யாரும் முன் வராத நிலையில், இலங்கை அரசின் இனவாத அத்துமீறல்கள், அட்டுழியங்கள் தொடர்ந்த வண்ணமே, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளும் நேரடியாகத் தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என சுட்டிக் காட்டுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு.
இந்த மனித ஆணைக்குழுவின் சுட்டிக்காட்டலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலை சாய்க்குமா அல்லது பேசாமடந்தைகளாக மெளனம் சாதிப்பார்களா?

Thursday, August 30, 2007

சாவின் விளிம்பு

சாவின் விளிம்பிற்கு நான் சென்று வந்த அனுபவம் பல இருகின்றது நான் 4 வயதிருக்கும் போது அப்பாவுடன் சைக்கிளில் செம்மணியால் ஒரு இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருக்கும் போது இந்திய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று எம்மை துரத்தி துரத்தி சுடத்தொடங்கியது அப்பாவோ தனக்கிருந்த எல்லா சக்தியையும் திரட்டி சைக்கிளை மிதித்து கடைசியில் செம்மணி சுடலையில்[மயானம்] இருக்கும் கொங்கிரீட் கட்டிடத்தில் கவர் எடுத்தோம் ஆனால் கட்டடத்துக்கும் மேல் எல்லாம் ரவைகள் விழ அங்கிருந்து தப்பி உடல்கள் எரிக்கும் இடத்தில் படுத்திருந்தோம் இது எனது முதலாவது அனுபவம் அதேபோல‌ இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதத்தில் எமது ஊரில் இருந்த வீட்டில் இந்தியன் ஆமியின் பிரச்சினை காரணமாக எமது அம்மாவின் தங்கையின் குடும்பம் அப்பாவின் சகோதரர்கள் என ஒரு 5 குடும்பம் வரையில் தங்கி இருந்தோம் ஒரு நாள் புலிகள் வைத்த கண்ணிவெடியில் கடுப்பான இந்தியன் ஆமி வீட்டை சுற்றிவளைத்து எம் அனைவரையும் வெளியே வரச்சொல்லி வீட்டு முற்றத்தில் லைனில நிக்க வச்சு சுடுவதற்கு ஆயத்தமாகினர் அந்த நேரத்தில் நாய் ஒன்று அவங்களை பார்த்து குரைக்க ஏற்க‌னவே கடுப்பில் இருந்த இந்தியன் ஆமி நாயை துரத்தி துரத்தி வெடி வைக்கும் போது அந்த சத்தத்தில் எமது ஊரின் இந்தியன் ஆமியின் கமாண்டராக இருந்த மல்கோத்திரா என்னும் இந்திய இராணுவ அதிகாரி அவ்விடத்துக்கு வர அவனே மற்றைய இராணுவத்தினரை சமாதானப்படுத்தி எம் அனைவரையும் காப்பாற்றினான் இல்லாவிட்டால் வல்வெட்டிதுறை படுகொலையை எப்படி நினைவு கூறுகின்றோமோ அப்படி கைதடி படுகொலை என ஒன்றை நினைவுகூர்ந்திருக்கும் தேவை இருந்திருக்கும்

அதன் பின்னர் நான் நினைகின்றேன் 93 அல்லது 94 என‌ மாமாவின் திருமணத்துகாக இந்தியா செல்வதற்கு கிளாளியை நோக்கிய பயணம் தொடங்கியது இருபாலைக்கும் கல்வியங்காட்டுக்கும் இடையில் அதாவது வரதர் மாஸ்டரின் ரியூட்டரிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு முன் என் கால்களை சைக்கிள் சில்லுக்குள் கொடுத்து விட்டேன்.இருபாலையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவரின் வைத்திய நிலையத்துக்கு சென்று மருந்து கட்டிவிட்டு கிளாளி நோக்கி பயணமானோம் அங்கு ஒருவாறு படகுக்கு டிக்கட் எடுத்துவிட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்த போது இரவில் என்னால் நடக்கமுடியாது பயமாக இருகின்றது என அழுது ஆர்பாட்டம் பண்ணினேன் இன்று போகாமல் நாளைக்கு பயணமாகுவோம் என்பதை கேட்ட அப்பா சரி என சொல்லி வீட்டினை நோக்கி பயணமானோம் அடுத்த நாள் பத்திரிகையில் கிளாளி படகினை வழிமறித்த சிங்கள படைகள் சரமாரியாக வெட்டி 40 தமிழர்களை கொன்றனர் என்னும் செய்தி படித்தோம் இதனை சாவின் விளிம்பு என சொல்லமுடியாவிட்டாலும் என்னை பொறுத்தவரையில் அவ்வாறான நிகழ்வே.

அது போக போனவருடம் 2005ம் ஆண்டு டிச‌ம்பர் 26ம் திகதி சரியாக சுனாமி வந்து 1 வருடம் அன்று நாம் நண்பர்களுடன் அவுஸ்திரேலியாவில் கடற்கரை ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தோம் அது பெரிய பயங்கர அலைகளை கொன்ட கடல் நாம் 4 பேர் கடலில் விளையாடி கொண்டிருந்தோம் அப்படியே மெதுமெதுவாக முன்னேறி அலைகள் உருவாகுவதற்கும் இடம் அதாவது முதல் ஒருதிட்டாக எழுந்து வருமல்லவா அதில் நானும் இன்னொரு நாண்பரும் சென்று எமது உயரத்தில் நாம் இருவருமே 6 அடி 2 அங்குலம் உயரமானவர்கள் எம்மை விட உயரமான இடத்தில் அலைகளுக்குள் மாட்டாமல் துள்ளி துள்ளி விளையாடி கொன்டிருந்தோம் எனது இரு நண்பர்கள் கடற்கரையிலும் மற்றையவர்கள் வேறிடத்திலும் இருந்தார்கள்.திடீரென‌ கரையை திரும்பி பார்த்தது கரையில் இருந்து ஒரு 100 தொடக்கம் 150 மீற்றர் தொலைவில் நாம் நின்று கொண்டிருந்தோம் கரை எமக்கு தெரியவில்லை ஏன் எனின் இராட்சத அலைகள் எம்மை கரையில் இருந்தவர்களை மறைத்து கொண்டிருந்தது எனக்கு நீச்சல் வரும் என்றாலும் நீந்த முடியவில்லை காலை நிலத்தில் வைக்கலாம் என பார்த்தாலும் முடியவில்லை எனக்கு மூச்சு எடுப்பதற்கும் கஸ்டமாக இருந்தது பதட்டத்தில் நாம் உதவி உதவி என கத்தும் போது பக்கத்தில் நின்ற வெள்ளைகள் தாம் பிழைத்தால் காணும் என கரைக்கு போய் விட்டார்கள் கரையில் நின்ற நண்பர்கள் இருவரும் எம் நிலையை அறிந்தவுடன் ஒருவர் கடலை விட்டு வெளியே ஓடிவிட்டார் மற்றவர் தன் உயிரை பணயம் வைத்து எம்மை காப்பாற்ற மெதுமெதுவாக முன்வந்தார் அவரின் கையினை என் கை தொடும்போது வந்த இராட்சத அலை அவரை எமக்கு முன்னால் இருக்கும் நீரோட்டத்துகுள் இழுத்து சென்றுவிட்டது எனக்கென்றால் ஒரே விசர் என்னை காப்பாற்ற வந்தவரை என்னால் ஆபத்தில் சிக்கிக்கொண்டாரே என அப்போது லைப் காட்ஸினை என்னுடன் இருக்கும் நண்பர் கண்டு விட்டார்

எம்மை நோக்கி வேகமாக சர்வ சாதாரணமாக நீந்தி வந்த அந்த உயிர்காக்கும் தொண்டரை நாம் எப்படியும் கரையை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எம்மை காப்பாற்ற வந்து ஆபத்தில் சிக்கி கொண்ட மற்றைய நண்பரை நோக்கி செல்லும் படி சைகை காட்டினோம் பக்கத்தில் இருந்த நண்பரோ ஒருவாறு கரையை நீந்தி அடைந்து விட்டார்.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஒருவாறு கண்ணை மூடியபடி நீந்த தொடங்கினேன் ஒருவாறு அலைகள் உருவாகும் நீரோட்டத்தை அடைந்துவிட்டேன் அங்கிருந்து அலைகளோடு அலைகளாக கரையில் சுருட்டி வீசப்பட்டேன்.கரையில் நின்ற 3 நண்பர்களும் என்னை தூக்க வந்த போது அவர்களை உதறி விட்டு மற்றைய நண்பரை நினைத்து அவரின் நிலையை எண்ணி ஒரு குழப்பாமான நிலையில் விசரன் போல கடற்கரையை அதாவது கடலில் இருந்து எதிர்திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் அதன் காரணம் நான் தத்தளித்து கொண்டிருக்கும் போது அவர் எழுப்பிய அவலகுரல்தான் "இதோட நான் சரி" என்பது அதற்கு பிறகு அவரின் குரலை நான் கேட்கவில்லை அப்போது திடீரென ஜயாம் ஓகே சேவ் மை பிரன்ட்ஸ் என ஒரு குரல் கத்துவது கேட்டது திரும்பி பார்த்தால் கடலில் சிக்கிய நண்பரின் தலைமுடியை பிடித்து உயிர்காக்கும் தொண்டர் அவரது சேர்பிங் படகில் ஏற்றினார் அவரோ சேவ் மை பிரன்ட்ஸ் என அந்த லைப் காட்டினை கெஞ்ச லைப் காட்ஸ் அவரின் தலை முடியை பிடித்து திருப்பி எம்மிருவரையும் காட்டவே அவர் அமைதி அடைந்தார்.பின் ஒருவாறு கரையை அடைதார் அதன் பின்னரே நானும் வழமைக்கு வந்தேன் இல்லை வர முயற்சி செய்தேன் கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு 250 மீற்றர் தூரத்தில் எமது நண்பர்கள் கொஞ்ச பேர் இருந்தார்கள் அவர்களிடம் நாம் களைத்து விழுந்து போய் எமது சோககதை சொன்னபோது நம்ப மறுத்தபோது வந்த விசர் இருக்கே அதைபோல விசர் ஒருநாளும் வந்ததில்லை

அந்த சம்பவம் என் உண்மையான நண்பர் ஒருவரை எனக்கு இனம் காட்டியது என் நிலையை கண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாது என்னை காக்க வந்த அந்த நண்பரை வாழ்நாளில் எந்த சமயத்திலும் மறக்கமாட்டேன் .அன்றுகரையில் இருந்தே யோசித்தோம் நாம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஸ்டபட்டிருபார்கள் என அதுமட்டுமா எமக்காக உயிரை துச்சமென மதித்து எமது விடுதலைகாக போராடும் போராளிகளின் உழைப்பு கண்முன்னால் திரும்ப திரும்ப ஓடியது அங்கயற்கன்னி அக்கா அவர்கள் 35 மைல் நீந்தி தன்னை ஆகுதி ஆக்கும் போதும் எப்படி கஸ்டப்பட்டு உழைத்திருப்பார் எனவும் புரிந்தது நாம் எமது உயிரை காப்பாற்ற கஸ்டப்பட்டோம் ஆனால் அங்கற்கன்னி அக்காவோ 35 மைல்கள் கஸ்டப்பட்டு நீந்தி தன்னை வெடிக்க வைத்து கப்பலையும் தகர்த்து வெற்றி கண்டார்.இவர்களின் சாதனைகளுக்கும் அவர்கள் படும் கஸ்டங்களுக்கும் முன் நாம் அன்று ஒரு 20 நிமிடம் அனுபவித்த‌ கஸ்டம் ஒரு தூசுக்கு சமன்

Wednesday, August 29, 2007

உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழபிரச்சினை பற்றிய கருத்தாடல்கள்

உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய கருத்தாடல்கள் தொடங்கப்பட்டு இருகின்றது கீழ் வரும் இணைப்புகளில் அந்த கருத்தாடல்களை காணலாம்

madu church Massacre by srilankan govenment
http://worldub.blogspot.com/2007/08/madu-c...-srilankan.html

Rajiv Gandhi's War Crimes in Tamil eelam
http://worldub.blogspot.com/2007/08/rajiv-...amil-eelam.html

Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle

http://worldub.blogspot.com/2007/08/sri-la...-and-tamil.html
உங்களின் பங்களிப்பினை நல்குவதன் மூலம் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகின்றோம் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்

Tuesday, July 31, 2007

சிறீலங்கா சிறையில் என் சொந்த அனுபவம்-கலைஞன்

இந்த ஆக்கம் என்னுடையது அல்ல யாழ் கள உறுப்பினர் கலைஞனின் சொந்த கதை இதனை இங்கு வெளியிட அனுமதித்த கலைஞனுக்கு மிக்க நன்றி

சிறீலங்கா சிறையில் என் சொந்த அனுபவங்கள்- கலைஞன்

கொழும்புக்கு வந்திறங்கி சுமார் ஒரு கிழமைதான் ஆகியிருந்தது. அன்று காலை டமார் என்று ஒரு குண்டு தூரத்தில் வெடித்து கேட்டது! இரவைக்கு பொலிஸ் வரப்போறான். அயிடன்ட்டிக் கார்ட்டுடனும் பொலிஸ் கேட்கும் கேள்விகளிற்கு பதில்கூறுவதற்கும் ஆயத்தமாக இருக்கும்படி வீட்டுஓனரால் எனக்கு அறிவுரை தரப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில்(1990 - 2000) சிறீ லங்கா அரசால் கொழும்பில் வாழும் தமிழர்மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இயல்பாகவே கொழும்பில் வாழ்பவர்களிற்கு பொதுவாக மற்றவர்களிற்கு உதவிசெய்ய வேண்டும் எனும் குணம் அறவே கிடையாது. சிறீ லங்கா அரசும் தமிழர் மீது கட்டுப்பாடுகளை விதித்துவிட இவர்கள் தமது உறவுகள் தமிழீழ தேசத்திலிருந்து கொழும்புக்கு வரும்போது சும்மா ஒருமுறை வந்து முகம் காட்டுவதற்கே பஞ்சிப்பட்டார்கள். பொலிஸ் பிரச்சனை, இராணுவ வீதிச் சோதனைகள் என்று சாட்டுக்கள் கூறி புதிதாக வந்தவர்களை வெட்டிவிட்டார்கள்.

இதற்கு உதாரணமாக நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை கூறிவிட்டு விடயத்திற்கு வருகிறேன். எனக்கு (சிறையால் விடுதலையடைந்த பின்) தொழில் சம்பந்தமாக கொழும்பில் ஒரு செல்வந்தர் வீட்டினுள் செல்லவேண்டி வந்தது. அப்போது வீட்டுத்தலைவி தனது உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரது உறவினர் இவ்வாறு கூறினார் "உங்கட அவேள் ஜவ்னாவிலிருந்து கொழும்புக்கு வந்து 02 கிழமையாச்சு, எப்ப போய் சொந்தக்காரரை சந்திக்கப்போறீங்கள்?" வீட்டுக்காரி இவ்வாறு பதில் சொன்னார் "நாங்கள் எப்பிடியப்பா போறது? அவேள் எங்கையோ லொட்சிலையாம் இருக்கிறீனம்! நான் எப்படியப்பா இவரையும் கூட்டிக்கொண்டு லொட்சுக்கு போறது?" இவ்வளவிற்கும் 24 மணித்தியாலமும் செல்வந்தர் குடும்பம் அழகிய ஆடம்பர காரில் கொழும்பு முழுவதும் உலாத்திக் கொண்டு திரிந்ததை நான் அறிவேன்!

இனிகதைக்கு வருகிறேன். பொலிஸ் இரவைக்கு வரப்போகிறது என வீட்டுஓனர் பூச்சாண்டிகாட்டி விட்டதும் நான் குளிர்சாதனப் பெட்டியுள் வைத்த சிக்கின் ஆகி விட்டேன். கை, கால் உதறத்தொடங்கியது. ஹார்ட்டும் டபக் டபக் தான். நேரத்துடனேயே சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டேன்.

சரியாக நடுச்சாமம் 12.00 மணி சொச்சத்தில் எனது அறைக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. பொலிஸ் வந்திருக்கிறோம். கதவை உடன் திற என கொச்சைத் தமிழில் கூறப்பட்டு கதவு பலமாகத் தட்டப்பட்டது. லைட்டை போட்டு கதவைத் திறந்தேன். நான்கு பொலிசும் வீட்டு ஓனரும் வாசலில் நின்றார்கள். அயிடன்டிக்கார்ட்டையும், பொலிஸ் ரிப்போர்ட்டையும் கேட்டார்கள். காட்டினேன். பொலிஸ் ஸ்டேசனுக்கு வருமாறும், அங்கு கூட்டிக்கொண்டுபோய் விசாரித்தபின் விடியற்காலையில் விட்டுவிடுவதாகவும் கூறி என்னை தமது பெரிய நாய்பிடிக்கும் வண்டியில் ஏற்றினார்கள்.

வண்டியினுள் ஒரு மாதிரி உள்ளே ஏறிய பின் பார்த்தபோது அதனுள் ஏற்கனவே சுமார் பத்து தமிழர்கள் பிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. எல்லோரும் கப் சிப். ஒருவருடன் இன்னொருவர் கதைகக் கூட இல்லை. இரு பொலிஸ்காரர் தம்முள் ஒரு விலாசம் எழுதப்பட்ட பேப்பரை காட்டி கதைத்த பின் வண்டி அடுத்த தெருவினுள் போய் நின்றது. கிடுகிடு என வண்டியில் இருந்த நான்கு பொலிசார் இறங்கி ஒரு வீட்டை நோக்கி சென்றார்கள். நாம் வண்டியினுள் இருந்து விடுப்பு பார்க்கத் தொடங்கினோம்.

சிறிது நேரத்தில் ஒரு இளம்பெடியனையும், ஒரு பதின்ரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவனையும் பிடித்து இழுத்து வந்தார்கள். சிறுவன் வீரிட்டு கொய்யோ, மைய்யோ என தெரு அதிரும்படி கத்தி அழத் தொடங்கினான். அவனது போராட்டங்களை சகித்துக் கொள்ளமுடியாத ஒரு பொலிசுகாரன் மற்றவனிடம் அவன் சிறுபிள்ளை விட்டுவிடலாம் எனச் சொல்ல சிறுவன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டான். சிறுவன் விடுதலையான சந்தோசத்தில் புளுகத்துடன் வீடு நோக்கி ஓட நமது வண்டி இன்னொரு தெரு நோக்கிச் சென்றது. சுமார் பதினைந்து பொலிஸ்காரர் கைது செய்யப்பட்ட சுமார் ஐந்து தமிழர்களுடன் எமது வண்டிக்காக மற்றைய தெருவில் காத்திருந்தார்கள். எல்லோரும் எமது வண்டியில் ஏறியதும் இறுதியில் பிடிக்கப்பட்ட சுமார் பதினாறு அப்பாவித் தமிழர்களுடன் வண்டி பொலிஸ்டேசன் நோக்கிச் சென்றது.

பொலிஸ்டேசனுக்கு நாங்கள் கூட்டிவரப்பட்ட போது அதிகாலை சுமார் இரண்டு மணியாகி இருந்தது. பொலிஸ்டேசன் அந்த அதிகாலையில் சிலநூறு தமிழ்ச் சனக்கூட்டங்களால் நிறைந்து திருவிழா போல் காட்சியளித்தது. பிடிக்கப்பட்ட நாம் எல்லோரும் ஸ்டேசனுள் கொண்டு போய் அடைக்கப்பட்டோம். கம்பிகளினுள்ளே நாம் இருந்தோம். கம்பிகளிற்கு வெளியே பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் தாய், தந்தைமார், மனைவிமார், சகோதரங்கள் நின்று அழுது கொண்டு இருந்தார்கள். எங்களுடன் சுமார் ஐந்து இளம் தமிழ்ப் பெண்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் மூவர் சத்தமிட்டு அழத்தொடங்கினார்கள். பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் உறவினர்கள் அவர்களிற்கு குடிப்பதற்கு குளிர்பானப்போத்தல்கள், உண்பதற்கு பனிஸ், பாண், வடை போன்றவற்றை வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். திடீரென்று ஒரு பொலிஸ்காரன் சத்தமாக கதைக்கத் தொடங்கினான். உறவினர்கள் எல்லோரையும் காலை எட்டுமணிக்கு பின் வருமாறு சொல்லி இப்போது எல்லோரையும் தங்களது வீடுகளிற்கு போகுமாறு சொன்னான். சனக்கூட்டம் கலைந்து கடைசியில் பிடிக்கப்பட்ட நாமும் பொலிஸ்காரரும் மாத்திரம் ஸ்டேசனுள் இருந்தோம். நித்திரை எனக்கு தூக்கிதூக்கி அடித்தது.

சிறிது நேரத்தில் நாம் ஒவ்வொருவராகக் கூப்பிடப்பட்டு எமது பெயர், அயிடன்டிக்கார்ட் இலக்கம், முகவரி என கேட்கப்பட்டு பதியப்பட்டது. பின் எங்களை - சுமார் இருபத்திரண்டு பேரை ஒரு சிறிய கூண்டினுள் போட்டு அடைத்தார்கள். அந்தக் கூண்டினுள் இருந்த நெரிசல் நல்லூர் தேர்த்திருவிழாவின் போது கோயிலினுள் அனுபவிக்கும் நெரிசலைவிட மோசமாக இருந்தது. நாம் எங்களிடையே கதைக்கத் தொடங்கினோம். மற்றவர்களின் பெயர், ஊர், தொழில், படிப்பு விடயங்களை கேட்டு அறிந்தோம். சில ஆண்கள் வெட்கத்தையும் பாராது அழத் தொடங்கினார்கள். சில வம்பில் பிறந்ததுகள் அந்த துன்பமான நேரத்திலும் ஜோக்குகள் அடிக்கத்தொடங்கினார்கள். எனக்கு அருகில் இருந்தவர் கூண்டினுள் பொலிஸ் சீ.ஐ.டி கூட மாறு வேசத்தில் இருக்கக்கூடும் என்றும் இதனால் மற்றவர்களுடன் ஒன்றும் கதைக்க வேண்டாம் என்றும் இரகசியமாக எனது காதினுள் சொன்னார்.

ஒரு இளைஞர் பயமின்றி சத்தமாக கதைக்கத் தொடங்கினார். டேய், தம்பிமார், அண்ணைமார் உங்களில யாராவது புலிகளுடன் சம்மந்தப்பட்டிருந்தால் பொலிசிடம் போய் சொல்லுங்கோடா! ஏன் உங்களுக்காக அப்பாவிகளான எங்களையும் போட்டு வதைக்கிறீங்கள்? எல்லோரும் அவன் கதைப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தோம். பதில் பேசவில்லை. மற்றவர்களிடம் மிஞ்சி இருந்த குளிர்பானங்கள், பனிஸ், பாண், வடைகளை பகிந்து உண்டபின் காலை சுமார் நான்கு அரை ஆகி இருந்தது. மெல்ல மெல்ல சுவர் மற்றும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி நித்திரைசெய்யத் தொடங்கினோம்!

காலை சுமார் 5.45 மணியளவில் எல்லாரும் மெல்ல மெல்ல எழும்பி விட்டோம். பொலிஸ்காரன் ஒருவன் எங்களில் ஒவ்வொருவராக அழைத்து முகங்கழுவி மலசலகூடம் செல்வதற்கு கூட்டிக் கொண்டு போனான். சீ.ஐ.டி யாக இருக்ககூடும் என்று எதிர்பார்த்தவனைக் காணவில்லை. நாங்கள் ஓரளவு சோர்வில் தூங்கியபின் அவன் எங்களது கூண்டில் இருந்து வெளியே சென்றுவிட்டான் என்பதை அறிந்து கொண்டோம். இப்போதுதான் சிறீ லங்கா உளவுப் பிரிவு எத்தனை ஜிம்மாளங்கள் எல்லாம் செய்கிறார்கள் என எனக்கு விளங்கத் தொடங்கியது!

ஊரில் இருந்தபோது தமிழ் ஆட்களை தினமும் கொழும்பில் பிடிக்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள் என பந்தி, பந்தியாக செய்திகள் படித்திருந்தேன். ஆனால் இப்போது நானே செய்தியாகி விட்டதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் துக்கமாகவும், அதேநேரம் பயமாகவும் இருந்தது. உதயன், ஈழநாதம், முரசொலி பேப்பர்களில் படித்த சித்திரவதைகள் எனக்கும் நடக்கப்போகிறதோ என்பதை நினைக்க மிகவும் பயமாக இருந்தது. கொழும்புக்கு போகப்போகின்றேன் எனச் சொன்னதும் வீட்டில் மிகவும் எதிர்ப்பு வந்தது. கொழும்பில் உன்னையும் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள் என பயமுறுத்தினார்கள். நண்பர்களும் அவ்வாறே சொன்னார்கள். ஊரிலிருந்து போன பல அப்பாவி நண்பர்களை சிறீ லங்கா பொலிசு அயோக்கியத்தனமாக உள்ளே தள்ளிவிட்டார்கள் என கூறினார்கள். ஆனால் ஊரில் எனது நிலமை, குடும்ப நிலமை மோசமாக இருந்ததால் எவ்விதமான ஆபத்தையும் எதிர்கொள்வது என்று துணிந்து கொழும்பு வந்தேன்.

என்னுடன் பிடிக்கப்பட்டவர்களில் பதின் நான்கு பேர் முதல் தரமாக பிடிபட்டவர்கள். நான்கு பேர் இரண்டாவது தரமாக பிடிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டுபேர் ஏற்கனவே இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் பொலிசினால் பிடிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே பிடிபட்டிருந்தவர்களிற்கு அனுபவம் இருந்ததால் தீர்க்கதரிசிகளைப் போல் எனக்கு இனி என்னென்ன நடைபெறப்போகிறது என்று காண்டம் வாசிக்கத் தொடங்கினார்கள். எப்படி, எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது என்று எனக்கு அறிவுரைகளும் தந்தார்கள். இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்கக் கேட்க எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. வாழ்க்கையில் படுபாதாளத்தில் விழுந்துவிட்டதை முதல் தடவையாக உணர்ந்தேன்.

சுமார் ஏழுமணிக்கே பொலிஸ் ஸ்டேசனுக்கு பொறுப்பான ஓ.ஐ.சி(Officer In Charge) வந்துவிட்டான். அவனுக்கு ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு தடவைக்கு மேலாக தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. வந்த அழைப்புக்கள் எல்லாம் பிடிபட்டவர்களை விடுவிக்க கோருவது சம்மந்தமாகவே வந்தது. உறவினர்கள் பொலிஸ் ஸ்டேசனுள் உள்ளே வரமுடியாதபடி வாசலிலேயே வைத்து மறிக்கப்பட்டனர். எம்மை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் எதையும் நீதி மன்றத்தில் வந்து கதைக்குமாறும் சொல்லி அனுப்பப்பட்டார்கள். எம்முடன் பிடிபட்ட மட்டக்களப்பை சேர்ந்த இருவர் யாரோ ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ஐ.சி க்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியதால்(இந்த தமிழ் எம்.பி யின் பெயர் யோகேஸ்வரன் என்று நினைக்கிறேன். யோக என்று இவரது பெயர் ஆரம்பிக்கிறது) காலை ஏழு முப்பது மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். என்னையும் இவ்வாறு யாராவது தமது செல்வாக்கை பயன்படுத்தி விடுதலை செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. இப்போது எமது குழுவில் எல்லாமாக பதினெட்டு பேர் இருந்தோம். மற்றவர்களின் உறவினர்களும் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி தமது உறவுகளை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் ஓ.ஐ.சி மிகவும் துவேசம் பிடித்தவனாக, கரார் பேர்வழியாக இருந்ததால் முயற்சி பலிக்கவில்லை.

இந்த நேரத்தில் ஒரு உதவாக்கரையைப் பற்றியும் பேசவேண்டியுள்ளது. நான் கொழும்புக்கு வெளிக்கிட்டபோது எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கம், விலாசம் எனது பெற்றோரால் எனக்கு தரப்பட்டது. ஏதாவது பிரச்சனை வந்தால் இவருடன் தொடர்பு கொண்டு இன்னாரின் மகன் என்று சொல்லி உதவி கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தேன். குறிப்பிட்ட நபர் சிறீ லங்காவின் ஒரு அமைச்சரவையில் செயலாளராக இருந்தான். நான் கொழும்பு வந்ததும் பலமுறை இவனுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனளிக்கவில்லை. வீட்டிற்கு நேரில் செல்லாம் என யோசித்த போது அதுவும் முடியவில்லை. அவன் பெரிய அரசியல் புள்ளிகளின் வீடுகளிற்கு அருகில் இருந்ததால் என்னை போன்ற லோக்கல் குடிமகனால் அவனை உறவினனாக இருந்தும் கிட்டவும் அணுக முடியவில்லை. அவனும் நான் புலியாக இருப்பேனோ என சந்தேகப்பட்டான். இறுதியில் இவ்வாறு நான் அவனை உதவிகேட்டு துரத்தி திரிவதை அறிந்தவன் இன்னொரு உறவினனிடம் நான் தன்னை பார்க்கமுடியாதென்றும் தான் சரியான பிசி என்றும், மேலும் கொழும்பில் நான் தங்க வசதி இல்லையென்றால் ஊருக்கு திரும்பி போய்விடுவதே புத்திசாலித்தனமானது என்றும் சொல்லிவிடுமாறு கூறியிருந்தான். இவனாவது இறுதி நேரத்தில் நான் பொலிசில் பிடிபட்டுள்ளதை அறிந்து உதவி செய்யக்கூடும் என்ற நப்பாசையில் நான் பிடிபட்டதை கேள்வியுற்று வந்த நண்பனிடம் இவனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தேன். நண்பன் அவனுடன் தான் கதைத்ததாகவும் அவன் நான் தனக்கு உறவினராக இருந்தாலும் என்னைப்பற்றி விபரமாகத் தெரியாதபடியால் எனக்கு உதவமுடியாது என்று கூறிவிட்டதாகவும், மேலும் தமது செல்வாக்கை பயன்படுத்தி இவ்வாறு உறவினர்களுக்கு உதவக்கூடாது என்று தான் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்டிருப்பதாகவு ம் என்னை நீதிமன்றத்தில் வைத்து கதைத்தபோது அவனுடன் கதைத்தவற்றை கூறினான்.

இப்போது காலை 7.45 மணியளவில் இருக்கும். ஏற்கனவே அனுபவம் உடைய என்னுடன் பிடிபட்ட மற்றவர்கள் எம் எல்லோரையும் பொலிசு நீதிமன்றதிற்கு கொண்டு சென்றபின் நாம் எல்லோரும் மகர சிறைச்சாலையில்(Mahara Prison) அடைக்கப்படலாம் என எதிர்வு கூறினர். நேற்று நடைபெற்ற குண்டுத்தாக்குதல் மிகப்பாரிய அழிவை கொழும்பில் ஏற்படுத்தியிருப்பதாகவும் இதனால் நாம் நீதிமன்றத்தில் வைத்து பிணையில் (Bail) விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லையென்றும் அபசகுணமாகப் பேசினார்கள். இப்போது காலை சுமார் எட்டு மணியளவில் பொலிசு கூண்டிலிருந்து எம்மை ஒவ்வொருவராக வெளியே கூப்பிடப்பட்டு பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு கூட்டிச் செல்லத் தொடங்கினார்கள். ஏற்கனவே 18 பேரில் 12 பேர் சென்றுவிட்டார்கள். 6 பேர் கூண்டினுள் மிஞ்சி இருந்தோம். மற்றவர்களை வைத்து பொலிஸ் என்ன செய்கிறார்கள் என எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களிற்கு பொலிஸ் அடிக்கிறார்களோ என்பதை நினைக்க பயமாக இருந்தது.

இப்போது எனது தடவை வந்தது. குலை நடுக்கத்துடன் பொலிசு காட்டிய பகுதிக்கு அவனது காவலுடன் நடந்து சென்றேன். ஒரு தடியன் முன்னால் கொண்டுபோய் நான் நிறுத்தப்பட்டேன். அவன் என்னை பல கேள்விகள் கேட்டு விசாரித்தான். நேற்று நடந்த குண்டுவெடிப்பை பற்றி ஏதாவது தகவல் தெரியுமா? ஏன் கொழும்புக்கு வந்தாய்? ஊரில் என்ன செய்தாய்? உனக்கு யார் கொழும்பில் இருப்பதற்கு காசு தருகிறார்கள் என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான். இந்த விசாரணையின் பின் நான் பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு இன்னும் உடம்பில் அடிவிழாதது கண்டு ஆச்சரியப்பட்டேன். மற்றைய பகுதிக்கு சென்றபோது என்னுடன் பிடிக்கப்பட்ட மற்றவ்ர்கள் சேர்ந்து ஒரு குழுவாக நிற்பதைக் கண்டேன். எனக்கு பொலிசாரினாலும், மற்றைய நண்பர்களாலும் உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. திடீரென்று பொலிசார் எம்மீது காட்டும் அன்புக்கான அர்த்தம் அப்போது எனக்கு தெரியவில்லை. அங்குதான் முதன்முதலாக நான் எனது வழக்கறிஞரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தரப்பட்டது.

இந்த தமிழ் வழக்கறிஞரை பற்றி இங்கே கொஞ்சம் கூறுவது பொருத்தமானது. இவன் பார்ப்பதற்கு ஒரு வெருளிக் குஞ்சு போல் இருந்தான். நல்ல குடிகாரச்சாமி என்று வேறு சொன்னார்கள். எனக்கென்று ஒரு வழக்கறிஞரும் வரவில்லை. இதனால் மற்றைய நண்பர்கள் தங்கள் வழக்கை கவனிக்கப்போகும் இவனையே வழக்கறிஞராக நான் பிடிக்கலாம் என்றும் இதற்கு ஆகக்குறைந்தது ரூபா 5000 ஆகுமென்றும் கூறினார்கள். இன்னும் சிலர் சேர்ந்து இன்னொரு தமிழ் வழக்கறிஞரை பிடித்தார்கள். இப்பொழுது எம் 18 பேரின் வழக்கை கவனிக்க இரண்டு வழக்கறிஞர்களும் தயாராகி விட்டார்கள். ஆனால் எம்மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன என்று ஒருவருக்கும் தெரியவில்லை. இரு வழகறிஞர்களும் பொலிஸ் அதிகாரிகளும் பெரிய, பெரிய பகிடிகள் எல்லாம் விட்டு, சத்தம் போட்டு சிரித்து மச்சானும், மச்சானும் போல கதைத்துக் கொண்டு இருந்தார்கள். இதேநேரம் வேறு இரு பொலிஸ் அதிகாரிகள் ஒரு பெரிய சட்டப்புத்தகத்தை கையில் தூக்கிவைத்துக் கொண்டு எமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கடதாசியை நீதி மன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தட்டச்சு செய்து கொண்டிருந்தார்கள். தட்டச்சு செய்யும் போது இடையிடையே அந்தப் பெரிய சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பைபிலை ஆராய்வது போல் வரிவரியாகக் காட்டி தம்மிடையே விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். சுமார் 30 நிமிடங்களில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக் கடதாசி தயாராகிவிட்டது. எமது வெருளிக் குஞ்சு வழக்கறிஞரையும் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளையும் குற்றச்சாட்டு கடதாசியை எழுதிய பொலிஸ் அதிகாரி கூப்பிட்டான். இப்போது சுமார் ஐந்துபேர் குற்றக் கடதாசியை வைத்து விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

கடைசியில் எமது வெருளிக் குஞ்சு எம்மிடம் வந்து தான் நீதிமன்றத்தில் கதைத்து எம்மை விடுதலை செய்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து இடுமாறும் சொன்னது. எனக்கு நான் கையெழுத்து இடப்போவது குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம் என்று தெரிந்திருக்கவில்லை. கும்பலுடன் கோவிந்தா என்று எல்லோருடனும் சேர்ந்து நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படப்போகின்றேன் என்ற புளுகத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட்டேன். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை வெருளிக்குஞ்சும் சொல்லவில்லை, நாங்களும் கேட்கவில்லை. இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது மிகப்பொருத்தமானது. அதாவது தமிழ் வழக்கறிஞர்கள் கூட உண்மையுடனும், நேர்மையுடனும், தொழில் தர்மத்துடனும் வேலைசெய்யவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை சிங்களக் குண்டர்கள் துன்புறுத்துவது போதாதென்று இவர்களும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு பச்சைத் துரோகம் செய்கிறார்கள்.

சிறீ லங்கா பொலிசு அப்பாவித் தமிழ் இளைஞர்களை அள்ளி அள்ளிப் பிடிப்பதன் இன்னொரு இரகசியம் இது ஒரு பெரிய வியாபாரம். இந்த வியாபாரம் சிறீ லங்கா நீதித்துறையாலும் சிறீ லங்கா காவல்துறையாலும் உத்தியோகப்பற்றற்ற முறையில் நடத்தப்படுகிறது. ஒரு அப்பாவி தமிழ் இளைஞனைப் பிடித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனால் பொதுவாக சுமார் ரூபா 5000 தொடக்கம் சுமார் ரூபா 25000 வரை சம்பாதிக்க முடியும். வழக்கறிஞர்கள் சுருட்டிக் கொள்ளும் காசு இந்தக் கணக்கில் அடங்கவில்லை. அது வேறாக இன்னும் பல ஆயிரங்கள்! வெளியில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களிற்கு இது வெறும் கைதுகளாகத்தான் தெரியும். ஆனால் இதனுள் எத்தனை கோடிகள் புரட்டப்பட்டு வியாபாரம் நடக்கின்றது என்பது சிறீ லங்கா நீதித்துறைக்கும், சிறீ லங்கா காவல்துறைக்கும் மட்டும் தெரிந்த இரகசியங்கள். கொழும்பில் உள்ள ஊடகத்துறைக்கும் இந்த ஜிம்மாளங்கள் எல்லாம்தெரியும். ஆனால் பத்திரிகைகளில் இதைப்பற்றி எழுதும் அளவிற்கு அவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை.கைதுகள் என்ற போர்வையில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் வதைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை சிதைக்கப்படும் அதேநேரம், அவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் சிறீ லங்கா அரசாங்கத்தால் அப்பாவி தழிழ் இளைஞர்களிடமிருந்து திருடப்படுகிறது. இதை பட்டப்பகலில் சிறீ லங்கா அரசு செய்யும் கொள்ளை என்று கூறினால் அது மிகையாகாது. இதில் கசப்பான உண்மை என்னவென்றால் தமிழ் வழக்கறிஞர்களும் இந்தபகல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதைப்பற்றி ஏதாவது கொழும்பில் உள்ள தமிழ் வழக்கறிஞர்களிடம் கேட்டால் அவர்கள் தமிழர்களிற்கு தாம் சேவை செய்வதாகவும், வெறும் காற்றைக்குடித்து வாழ்வதாகவும், தாம் ஒரு அப்பாவிகள் எனவும் கூறி உங்கள் காதில் பூ வைத்துவிடுவார்கள்!

நான் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். எம்முடன் பொலிஸ்டேசனில் ஐந்து தமிழ் பெண்களும் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? அவர்களை எங்களை கூண்டினுள் போட்ட நேரத்தில் வேறு எங்கோ கூட்டிக் கொண்டுபோய் எங்களிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் போட்ட கூக்குரல், அட்டகாசம், மற்றும் அழுகை காரணமாக காலையில் கடுமையான எச்சரிக்கையின்பின் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுவிட்டார்க ள். அதாவது அவர்கள் தினமும் பொலிஸ்டேசனுக்கு போய் கையெழுத்து போட வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அறிவுரையை தமிழ் பெண்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் சிறீ லங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டால் கைதுசெய்யப்படும் அந்தக் கணத்திலிருந்தே உங்களால் முடிந்தளவு போராட்டத்தை அழுகை, கூக்குரல், பேயாட்டங்கள் மூலம் செய்து நீங்கள் பொலிசினை நிலைகுழையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களது தொல்லையை தாங்க முடியாத பொலிசு எப்படியும் உங்களை விரைவில் விடுதலை செய்துவிடும். அவ்வாறு இல்லாது அமைதியாக இருந்து உங்களுக்குள் முணகி அழுதுகொண்டிருந்தால் கடைசியில் கம்பி எண்ணவேண்டியதுதான்!

இப்போது காலை ஒன்பது மணியளவு ஆகத்தொடங்கியது. வெருளிக்குஞ்சு வழக்கறிஞன் தான் எங்களை சிறீ லங்காவின் நீதிமன்றத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு பொலிஸ்டேசனைவிட்டு போய்விட்டான். இப்போது ஆயுதம் தரித்த சுமார் ஆறு பொலிசார் எம்மை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். ஒரு பெரிய நாய்பிடிக்கும் வண்டி ரிவேர்சில் எங்களை நோக்கி வந்தது. நாம் உடனடியாக வண்டியினுள் ஏற்றப்பட்டு ஆயுதந்தரித்த பொலிசாரின் காவலுடன் சிறீ லங்காவின் நீதிமன்றம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டோம். வீதியின் இருமருங்கும் நின்றவர்கள் எங்களை படுபாதகர்களாக கற்பனைசெய்தபடி சந்தோசத்துடன் விடுப்பு பார்த்தார்கள். சூரியன் உதித்து கொழும்பு மாநகர் வெளிச்சமாகக் காணப்பட்டது. ஆனால் எனது வாழ்வு இருண்டுவிட்டதை சிறீ லங்காவின் நீதிமன்றம் செல்லும் போது நான் உணர்ந்தேன்.

நாய்வண்டி சிறீ லங்கா நீதிமன்றத்தின் வாயிலினூடாக நுழைந்து கைதிகளை தற்காலிகமாக அடைக்கும் இடத்திற்கு அருகாக போய் நின்றது. கடகட வென நாம் எல்லோரும் ஆடுமாடுகளைப்போல் அவசரப்படுத்தப்பட்டு இறக்கப்பட்டோம். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கைதிகளின் சிறைக்கூண்டு நோக்கி கூட்டிச்செல்லப்பட்டோம். முன்பு இருந்த நிலைக்கும் இப்போது இருந்த நிலைக்குமிடையே பொலிசாரின் நடத்தையில் பாரிய மாற்றத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. பொலிசார் எம்மீது மிகக் கடுமையாக நடக்கத்தொடங்கினாங்கள். மெதுவாக நடந்தவர்களின் மண்டைமீது குட்டுக்கள் விழுந்தது. அங்கால், இங்கால் பறாக்கு பார்த்தவருக்கு சொக்கையில் பவுண்டரி அடிக்கப்பட்டது. எங்களது நாய்வண்டி வந்த அதேநேரம் வேறு வேறு இடங்களிலும் இருந்து பல நாய்வண்டிகள் வந்தன. எமது வண்டிக்கு முன்பு வந்த சில வண்டிகள் சரக்கை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருந் தன. வெவ்வேறு சிறிய, சிறிய அளவுகளிலும் நாய் வண்டிகள் வந்தன. "சிறீ லங்கா போலிசிடம் இத்தனை வகை வகையான நாய்வண்டிகளா!" நான் இவற்றை முதன்முறை பார்த்ததால் பிரமித்துபோய்விட்டேன்!

இங்கு ஒரு விடயத்தை கூறிச் செல்வது பொருத்தமானது. நீஙகள் ஒரு உறவினரின் அல்லது தெரிந்தவரின் உயிரை தனியார் வைத்தியசாலையில் பறிகொடுத்தபோது வைத்தியசாலையின் நிருவாகம் எப்படி ஒருவரின் மரணத்தை உறவினர்களுடன் கையாள்கிறது என்பதை உற்றுக் கவனித்து இருந்தால் சிறீ லங்கா பொலீசு எப்படி கைதிகளின் உறவினர்களை நிருவாகம் செய்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இதை படிமுறைகளாக சொன்னால் விளங்குவதற்கு இலகுவாக இருக்கும்.

வைத்தியசாலை நிருவாகம் மரணத்தை நிருவகிக்கும் முறை:

அ. அடிக்கடி தாதிகளை அனுப்பி நோயாளியை பார்க்கச் செய்வார்கள்
ஆ. அடிக்கடி வைத்தியர் மிகவேகமாக நடந்துவந்து நோயாளியை பார்த்துச் செல்வார்
இ. நோயாளிக்கு ஒட்சிசன் வாய்மூலம் கொடுக்கப்படும்
ஈ. நோயாளி ICUக்கு கொண்டு செல்லப்படுவார்
உ. உறவினர்கள் நோயாளியை பார்ப்பதும் தடை செய்யப்படும். தம்மால் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்று உறவினர்களிற்கு வைத்தியர் கூறுவார்
ஊ. மிக நீண்ட நேரத்திற்கு நோயாளி ICU இனுள்ளேயே வைத்திருக்கப்படுவார்
எ. நோயாளி இறந்ததும் நோயாளியின் இதயத்துடிப்பு நன்றாகக் குறைந்துவிட்டது என்று உறவினர்களிடம் கூறப்படும்
ஏ. நோயாளிக்கு இப்போது இதயத்துடிப்பே இல்லையென்ற மாதிரி உறவினர்களிற்கு கூறப்படும்.
ஐ. இறுதியில் உறவினர்கள் ICU இனுள் சென்று நோயாளியை பார்வையிடலாம் என்று கூறப்படும். அங்கே பல மணி நேரத்துக்கு முன் இறந்த அன்புக்குரியவரின் உயிரற்ற உடல் காணப்படும்.

அதாவது ஒருவரது மரணத்தை எப்படி உறவினர்களுடன் கையாள்வது என்பது ஒரு கலை. இது படிப்படியான பல அம்சங்களைக் கொண்டது (It is a Step by Step Process). சரியாக இதேமாதிரியானதே அப்பாவித் தமிழ் கைதிகளை சிறீ லங்கா போலிசு கையாளும் முறை!

சிறீ லங்கா போலிசு நிருவாகம் தமிழ் கைதிகளை கையாளும் முறை:
அ. அப்பாவி தமிழ் இளைஞர்கள் போலீசுஸ்டேசனுக்கு விசாரணைக்கு வருமாறும் சில மணி நேரத்தில் விசாரணையின் பின் விடுவிக்கப்படுவதாகவும் சொல்லி சிறீ லங்கா பொலிசாரினால் கூட்டிச் செல்லப்படுவார்கள்
ஆ. பொலிஸ்டேசனில் வைத்து நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டபின் அங்கு வைத்து உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவார்கள்
இ. நீதி மன்றத்தில் வைத்து அப்பாவி இளைஞர்களை தற்காலிகமாக சிறையில் அடைக்குமாறு நீதிபதியிடம் சிறீ லங்கா போலிசார் மனு சமர்ப்பிப்பார்கள்
ஈ. பிணையில் இளைஞர்களை விடுவது ஆபத்தானது எனக்கூறி சிறைவாசக்காலத்தை பொலிசார் சிறீ லங்கா நீதிமன்றம் மூலம் நீடிப்பார்கள்
உ. இறுதியில் அப்பாவி இளைஞர்களின் சிறைவாசம் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற போர்வையில் சிறீ லங்கா பொலிசாரினால் நிரந்ததரமாக்கப்பட்டுவிடும்

கைதிக்கு கைதி மேற்கூறிய படிமுறைகளில் சிறு, சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் சிறீ லங்கா பொலிசார் அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு எதிராகப் பயன்படுத்தும் அடிப்படைச் சித்தாந்தம் அனைத்து தமிழ் இளைஞர்களிற்கும் பொதுவானது. அதாவது அப்பாவி தமிழ் இளைஞர்கள் மிகநன்றாக சட்டத்தின் பெயரால் சிறீ லங்கா அரசினால் ஏமாற்றப்படுகின்றார்கள்.

நாம் எல்லோரும் சுமார் நூற்று ஐம்பது சதுரஅடி பரப்பளவுள்ள தற்காலிக சிறைக்கூண்டினுள் அடைக்கப்பட்டோம். அதனுள் ஏற்கனவே சுமார் ஐம்பது கைதிகள் இருந்தார்கள். நாம் போனபின்பும் புதிதாக கைதிகள் கூண்டினுள் வந்து கொண்டிருந்தார்கள். எழும்பி நிற்கவும் முடியவில்லை. குந்தி இருக்கவும் முடியவில்லை. ஒற்றைக்காலில் சுவரை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது. இதை விபரிக்க நெரிசல் என்ற சொல்லை பாவிப்பது பொருந்தாது. தேன் கூட்டில் எவ்வளவு அடர்த்தியாக தேனீக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறி மொய்த்து இருக்கின்றனவோ அவ்வாறான சனக்கூட்டம் அச்சிறிய கூண்டினுள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

இப்போது கூண்டில் இருந்த 75% கைதிகள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கிளவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரிய, பெரிய கொலை கேசுகளுடன் சம்மந்தப்பட்ட கிரிமினல்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும், கற்பழிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களாகவும், சிறு, சிறு திருட்டுச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நாம் ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருந்தோம். கண்ட, கண்ட கெட்ட வாசனைகள் எல்லாம் சிங்கிள கைதிகளில் இருந்து வீசியது. சிலர் அச்சிறிய கூண்டில் இருந்தும் புகை, மற்றும் கஞ்சா அல்லது குடு போன்றவற்றை நுகர்ந்து கொண்டிருந்தார்கள். கெட்ட, கெட்ட வார்த்தைகள் கூறினார்கள். தமிழ் கைதிகளை வெருட்டவும் செய்தார்கள். நான் தற்செயலாக சனநெரிசலின் காரணமாக தன்னை சிறிது தள்ளிவிட்டேன் என்ற கோபத்தில் ஒரு வெறிகாரன் எனக்கு அடிக்கவும் வந்துவிட்டான்.

இந்த நேரத்தில் குந்தியிருந்த ஒரு தமிழ் இளைஞன் நெரிசல், வலி தாங்க முடியாது எழும்ப முயன்ற போது சிறைக்கூண்டிற்கு வெளியே நின்று எம்மை அவதானித்துக் கொண்டு இருந்த ஒரு சிறீ லங்கா போலிசுகாரன் அவனை திரும்பவும் அதே இடத்தில் உட்காருமாறு சத்தமாக கட்டளையிட்டான். இவனால் வலி தாங்க முடியவில்லை. திரும்பவும் மெல்ல எழும்ப முயற்சித்தபோது மின்னல் வேகத்தில் பெரிய சத்தமிட்டபடி கூண்டை அடித்துத் திறந்து கொண்டுவந்த சிறீ லங்கா போலிசுகாரன் மிகக்கொடூரமான முறையில் அந்த அப்பாவி இளைஞனைத் தாக்கினான். தனது சப்பாத்து கால்களால் இளைஞன் மீது ஏறி உலக்கி மிகக்கொடூரமாக இளைஞனை அவன் தாக்கினான். அப்பாவித் தமிழ் இளைஞன் வலியின் கொடூரம் தாங்க முடியாததால் சத்தமிட்டு அழுதான். அவனது முகம் இருபுறமும் கொழுக்கட்டையாக சிவந்து வீங்கிவிட்டது. இளைஞனின் கண் இரத்தச் சிவப்பாகிவிட்டது. பல்லும் உடைந்துவிட்டது. இவ்வளவற்றையும் நேரில் பார்த்த சிங்களக் கைதிகள் கூட பயந்து நடுங்கிவிட்டார்கள். கூண்டு சுமார் பத்து நிமிடங்களிற்கு மயான அமைதியாகிவிட்டது. ஒருவருடன் மற்றவர் கதைக்கவில்லை. எல்லோரும் அடிவாங்கிய அப்பாவித் தமிழ் இளைஞனை அமைதியாகப் பார்த்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தக் கணத்தில் நான் ஒரு முழு மனநோயாளியாகிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும்.

சிறிது நேரத்தில் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் அநீதிபதி வந்ததும் விசாரணகள் தொடங்கியது. ஒவ்வொரு வழக்கினதும் வரிசைக்கிரமத்தில் விசாரணைகள் தொடங்கியது. விசாரணைக்கு குறிப்பிட்ட வழக்குகள் அண்மிக்கும் நேரத்தில் கூண்டினுள் இருந்த அந்தந்த வழக்குகளுடன் சம்மந்தப்பட்ட குற்றைவாளிகள்(?) ஆயுதந்தரித்த பொலிசாரின் கண்காணிப்பில் அநீதிபதி முன்னால் கொண்டுசெல்லப்படுவதற்காக கூண்டைவிட்டு வெளியேற்றபட்டு வெளியே வரிசையாக காத்திருக்கச் செய்யப்பட்டார்கள். முதலில் சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கைதிகளின் வழக்கே விசாரணைக்கு வந்தது. ஒவ்வொருவராக விசாரணை முடிந்து கூண்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். கூண்டில் இருந்த எல்லோருக்குமே இன்னொரு திகதிக்கு வழக்கிற்கான தவணை கொடுக்கப்பட்டு சிறைவாசம் நீடிக்கப்பட்டு இருந்தது. எமது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும், நாம் விடுவிக்கப்படுவோமா என்ற எதிர்பார்ப்புடன் 18 அப்பாவி தமிழ் இளைஞர்களும் கூண்டினுள் காத்துக்கொண்டு இருந்தோம்.

கொஞ்ச நேரத்தின் பின் எங்கள் 18 பேரின் பெயர்களும் கொச்சையாக சிங்களப் பொலிசாரினால் உச்சரிக்கப்பட்டு கூப்பிடப்பட்டது. சிறைக்கூண்டு திறக்கப்பட்டு நாங்கள் வரிசையாக அநீதிபதியின் முன் நிறுத்தப்படுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டோம்.

சில நிமிடங்களில் எமது பெயர் அநீதிமன்றத்தில் உரத்து வாசிக்கப்பட்டது. குற்றவாளிக்கூண்டினுள் 18 பேரும் ஒன்றாக நிற்பதற்கு இடம் போதவில்லை. அதனுள் எம் எல்லோரையும் அமுக்கி அடக்க எமக்கு பின்னால் இருந்து சிறீ லங்காப் பொலிசார் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். இப்போது போலிசார் எமக்கெதிரான குற்றப்பத்திரிகையை அநீதிபதியிடம் தாக்கல் செய்து, அதை விபரிக்கத் தொடங்கினர். அநீதிபதி அவர்கள் பக்கமாகத் திரும்பி அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கே அவனது மனச்சாட்சி சங்கடம் கொடுத்ததாலேயே எங்களைப் பார்க்கவில்லையோ தெரியாது! போலிசார் தமது அறிக்கையை விளக்கிமுடிந்ததும் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் மேசையைவிட்டு எழும்பி நின்று அநீதிபதியைப் பார்த்து ஏதோ சொல்ல வெளிக்கிட்டது. ஆனால் அநீதிபதி வெருளிக்குஞ்சை அசட்டை செய்தபடி போலிசு தனது கதையைச் சொல்லி முடிந்தகையோடே கிடுகிடுவென ஏதோ எழுதத்தொடங்கிவிட்டது.

இதன்பின் அநீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது இப்போது நினைவில்லை. ஆனால் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் எம்மிடம் வந்து எம்மை ஒரு கிழமைக்கு ரிமான்ட்டில் வைத்து மகர சிறைச்சாலையில் அடைத்துவிடுமாறு அநீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வந்து சொன்னது. நாம் எல்லோரும் இச்செய்தியைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டோம். போலிசு உடனடியாகவே கடும் கண்காணிப்புடன் எம்மை திரும்பவும் கூண்டுக்குள் கூட்டிக் கொண்டுவந்து அடைத்துவிட்டார்கள். அநீதிமன்றத்தில் இருந்த சிங்களப் பெரும்பான்மையினர் நாம் 18 பேரும் அநீதிபதி முன்னால் கொண்டு செல்லப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். போலிசார் உண்மையான குண்டுவெடிப்பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டது போல் சந்தோசப்பட்டார்கள். எங்களை நோக்கி நையாண்டியும் செய்தார்கள். நாங்கள் வெட்கிப்போய் சிறீ லங்கா பேரினவாதிகளின்முன் தலைகுனிந்து நின்றோம்
நாங்கள் ஒவ்வொருவரும் மனதில் பெரும் சோகங்களுடனும், அதிர்ச்சியுடனும் என்ன இனி செய்வது, சிறையில் எமக்கென்ன சித்திரவதைகள் நடக்கப்போகிறது என்று நினைத்து கவலைப்படத் தொடங்கினோம். இப்போது பிற்பகல் சுமார் இரண்டு மணியாகத் தொடங்கியது. வழக்கு விசாரணைகள் முடிந்ததும் கூண்டிலிருந்து சிறைக்கைதிகள் மெதுமெதுவாக அவர்களுக்குரிய சிறைகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக கூண்டிலிருந்து அகற்றப்படத் தொடங்கினார்கள். கூண்டினுள் இருந்து வெளிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே முதலாவதாக அகற்றப்படத் தொடங்கினார்கள். கொஞ்ச நேரத்தில் கூண்டு மெல்ல, மெல்ல வெளிக்கத் தொடங்கியது. கூண்டினுள் சிங்கிளக் கைதிகளுடன் முஸ்லீம் கைதிகளும் கணிசமான அளவில் காணப்பட்டனர். சிங்கிளவர்களுடன் அவர்கள் சினேகபூர்வமாக கதைத்து மகிழ்ந்தார்கள். எம்முடன் ஒன்றும் கதைக்கவில்லை.

கூண்டிற்கு வெளியே தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் உறவுகளிற்கு குளிர்பானப் போத்தல்கள், சிற்றுண்டிகள், பல் மினுக்குவதற்கு பற்பசை, சோப் போன்றவற்றை கடையில் வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். வந்தோம், கண்டோம், சாமன்களைக் கொடுத்தோம், விடைபெற்றுச் சென்றோம் என்ற மாதிரியே உறவினர்கள் தமது உறவுகளை அணுக முடிந்தது. உறவினர்கள் அழுவதற்கோ அல்லது கூண்டுக்கு அருகில் ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்பதற்கோ போலிசார் அனுமதிக்கவில்லை. சிங்களக் கைதிகளைப் பார்க்க பெரும்பாலும் உறவினர்கள் வரவில்லையென்றே கூற வேண்டும். ஆனால் பல தாதாக்கள் வந்து அவர்களிற்கு உணவுப் பொருட்களை கொடுத்து(முக்கியமாக சிகரட், குடு) தாம் விரைவில் வெளியே எடுப்பதாய் உறுதி கூறிச் சென்றார்கள் (நம்மட தமிழ் சினிமாப் படங்களில் வருவது போல்).

நேரம் சுமார் ஐந்து மணியாகத் தொடங்கியது. மகர சிறை தவிர்ந்த மற்றைய சிறைகளிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய கைதிகள் ஏற்கனவே கூண்டைவிட்டு அகற்றப்பட்டு விட்டனர். கூண்டில் சுமார் நாற்பது பேர் எஞ்சி இருந்தோம். அனைவரும் மகர சிறைக்கு போகப்போறவர்கள். எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால், சிங்களக் கைதிகளின் முகத்தில் மீண்டும் தாம் சிறை செல்லப்போகின்றோம் என்ற கவலையோ, பதற்றமோ காணப்படவில்லை. மாறாக ஏதோ தங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பிச் செல்லப்போகின்றோம் என்ற நினைப்பில் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பலர் புகை, குடு போன்றவற்றில் பிசியாக இருந்தார்கள். ஒருசிலர் தமிழ்க்கைதிகளுடன் பேசத் தொடங்கினார்கள்.

எனக்கு "சிங்கள புளுவங் எப்பா", "நம மொக்கத", "வெலாவ கியத" போன்ற ஒருசில சிங்கிள சொற்களே தெரிந்திருந்தது. ஆனால் எம்மில் சிலர் தென் தமிழீழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களாகவும், சிலர் கொழும்பில் நீண்ட காலமாக வசிப்பவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சிங்களக் கைதிகளுடன் சரளமாகக் கதைத்து ஒருவிதமான புரிந்துணர்வையும், நட்பையும் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆனால் சிங்கிளக் கைதிகளின் எம்மிடமிருந்தான எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது. அதாவது அவர்கள் நேரடியாகக் கேட்டும், எம்மைப் பயமுறுத்தியும் எம்மிடம் இருந்த காசுகளை பறிக்கத் தொடங்கினார்கள். ஒரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு இருக்கிறதா என்று கேட்டான். நான் இல்லை என்று பதில் சொல்ல அவன் எனது பொக்கற்று, உள்ளாடைகளை பரிசோதித்து நான் காசு வைத்திருக்கின்றேனா என்று பரிசோதித்தான். எம்மில் சிலர் தங்க நகைகள் போட்டிருந்தனர். ஆனால் அவர்களை சிங்களக் கைதிகள் காசுமட்டும் கேட்டு தொந்தரவு செய்தார்கள். இவர்கள் தங்க நகைகளை கேட்டு பறிக்காததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தாம் சிறைக்கு திரும்பிச் செல்லும் போது சிறைக்காவலர்கள் உடற்பரிசோதனை செய்யும் போது இந்த தங்க நகை எப்படி கிடைத்தது என்று கேட்டால் அவர்களிற்கு பதில் சொல்ல தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே காசை பறிப்பதில் மட்டும் குறியாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் இன்னொரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு தருமாறும் தான் என்னை சிறையில் வைத்து நன்றாக கவனிப்பதாகவும் சொன்னான். இன்னொருவன் வந்து கேட்டதற்கு நான் காசில்லை என்று சொன்னபோது சிறீ லங்காவின் அநீதிமன்றத்துக்கு என்னைப் பார்க்க வந்த உறவினர்களிடம் கேட்டு காசு வாங்கித் தருமாறு தொந்தரவு தந்தான். நாம் சிங்களக் கைதிகள் எம்மீது பலாத்காரம் புரிந்தாலும் அவர்களை பயத்தின் காரணமாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இப்போது மாலை ஆறு மணிசொச்சம் ஆகத்தொடங்கியது. கோர்ட்டிலிருந்து எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அப்பாவித் தமிழ் கைதிகளின் சில உறவினர்கள் மட்டும் வெளியில் தமது அன்புக்குரியவர்களை சிறைக்கு வழியனுப்பிவைப்பதற்காக காத்திருந்தார்கள். சிறைக்காவலாளிகளும் பொலிசாரும் சிறிது நேரத்தில் பரபரப்பு அடையத் தொடங்கிவிட்டார்கள். நாம் செல்லவேண்டிய நாய் வண்டி எமது கூண்டிற்கு அருகாக ரிவேர்சில் வந்துவிட்டது. நாம் ஒவ்வொருவராக வெளியே பெயர் சொல்லி அழைக்கப்பட்டு எமது ஒரு கையிலும் ஒரு காலிலும் நாய்ச்சங்கிலி இணைக்கப்பட்டது. இந்தச் சங்கிலி மூலம் தொடராக சுமார் இருபது பேரை ஒரேயடியாக இணைக்கமுடியும். கைகளிற்கும், கால்களிற்கும் இருவேறு சங்கிலிகள் பாவிக்கப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக நாற்பது பேருக்கும் சங்லிகள் மாட்டப்பட்டபின் நாம் அருகருகில் இருவராக சுமார் இருபது சோடிகளாக, ஒரு சோடிக்கு பின்னால் இன்னொரு சோடியாக அணிவகுத்து நின்றோம்.

இவ்வாறு கையிற்கும், காலிற்கும் சங்கிலிகள் போட்டு அடிமைகள் போல கைதிகளை இழுத்துச் செல்லும் காட்சியை நான் சிறு குழந்தையாக இருந்தபோது ஒருநாள் இரவு எனது அப்பாவுடன் திருகோணமலை நகரில் முற்றவெளியில் இருந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது நேரில் கண்டுள்ளேன். அவர்களை சுமார் பத்து நேவிக்காரர்கள் முன்னும், பின்னுமாக ஆயுதங்களுடன் பிரதான விதியால் நடத்திச் சென்றார்கள். அப்போது அந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு பயமாகவும், கைதிகளின் மீது பரிதாபமாகவும் இருந்தது. ஆனால் அதே நிலமை சுமார் இருபது வருடங்களின் பின் எனக்கு ஏற்பட்டுவிட்டதை நினைக்க மனதிற்கு மிகவும் கவலையாக இருந்தது.

குறிப்பு: இது எனது வாழ்வில் ஏற்பட்ட மிகவும் ஒரு துன்பகரமான சம்பவம். இதன் காரணமாக நான் விடுதலையடைந்த பின் சுமார் ஒரு வருடம் மனநோயாளியாக (ஆனால் வைத்தியரிடம் சென்று சிகிச்சை ஒன்றும் எடுக்கவில்லை) இருக்க வேண்டி வந்தது. கால ஓட்டத்தில் எனக்கு நடந்த கொடுமைகளை மறந்துவிட்டேன். இப்போது யாழ் கள நண்பர்களிற்காக நடந்த சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்தி எனக்கு என்ன நடந்தது என்பதை மீண்டும் யோசித்து நினைவுபடுத்தி கதையாகக் கூறுகின்றேன். உடனடியாக விசயங்களை கிடுகிடுவென்று விரைவாக எழுதிக் கொண்டு போனால் முக்கியமான விசயங்களை நான் மறந்து உங்களுக்கு சொல்லாது விடக்கூடும். எனவேதான் இத்தொடரை மெது, மெதுவாக பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி கொஞ்சம், கொஞ்சமாக எழுத வேண்டியுள்ளது!

உங்கள் பொறுமைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி! நான் இத்தொடரை எழுதுவதன் நோக்கம் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் நீதி விசாரணை என்று பெயரில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றார்கள் என்பதை அறியாதவர்களும், வெளி உலகமும் அறிந்துகொள்வதற்காகவேயாகும்

இப்போது சோடி சோடியாக நாய் வண்டியினுள் ஏறுமாறு நாம் சிறைக் காவலாளிகளால் பணிக்கப்பட்டோம். நான் முதன்முறையாக வார்டின் என அழைக்கப்படும் சிறைவாசம் அனுபவிக்கும் ஆனால் மற்றைய கைதிகளிற்கு பொறுப்பாக இருக்கும் (அதுதான் அந்த தமிழ்ப் படங்களில் காட்டுவாங்களே, சிறையினுள் இருக்கும் வெள்ளை காற்சட்டை, வெள்ளை பெனியன் போட்ட ஊத்தைவாளிகள், அவங்களைப் போல்) தடியன்களைப் பார்த்தேன். இந்தத் தடியன்களைப் பற்றி நான் புத்தகங்களில், சினிமாப் படங்களில் பார்த்திருந்தேன், அறிந்திருந்தேன். ஆனால முதல் தடவையாக சொந்த வாழ்க்கையில் இவனுகளைப் பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது.

நாய் வண்டியினுள் இருந்த இரண்டு தடியன்கள் உள்ளே ஏறும் கைதிகளை வண்டியினுள் ஒழுங்குபடுத்தி இருக்க வைத்துக் கொண்டு இருந்தான்கள். கைதிகள் சுமார் நாற்பது பேரும் கையிலும், காலிலுமாக சங்கிலிகளால் தொடராக பிணைக்கப்பட்டிருந்ததால் எல்லோரும் ஏறி முடிவதற்கு நீண்ட நேரம் எடுத்தது. வழியனுப்பவந்த அப்பாவித் தமிழ்க் கைதிகளின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை அடிமைபோல் இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்து கதறி அழுதார்கள். என்னால் அழ முடியவில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே எனது மேல்வீடு ஓரளவு கழன்ற நிலையில் இருந்தேன். ஆனால் மற்றைய சில அப்பாவிக் கைதிகள் தமது உறவுகளுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்கள்.

என்னுடன் சோடியாக சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தவன் ஒரு வயதுபோன சுமார் 55 வயது மதிக்கத்தக்க தாடி வளர்த்த திருடனாக இருந்தான். அவன் எனது பதற்றமடைந்த முகத்தை பார்த்தோ அல்லது என்மீது பரிதாபப்பட்டோ என்னமோ எனக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கொச்சைத் தமிழில் சொன்னான். நான் குற்றவாளியாக இருப்பேன் என்று தான் நம்மவில்லை என்று சொன்னான். எனக்கு சிறையில் வைத்து வேறு தனது சிங்கிள நண்பர்கள் மூலம் உதவி செய்வதாகவும், என்னைப் பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். அவன் என்ன தான் ஆறுதல் வார்த்தை எனக்கு சொன்னாலும் அவனது முகத்தை என்னால் ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. குடு மற்றும் புகைத்தலால் அவனது வாயில் இருந்து குப்பு குப்பென்று செத்த எலியின் நாற்றம் அடித்தது.

எல்லோரும் ஏறிய பின்னரும் சுமார் பதினைந்து நிமிடங்கள் நாய் வண்டி சிறீ லங்காவின் அநீதி மன்றத்தில் காத்திருந்தது. வாகன ஓட்டுனர் ஏதோ சமிக்ஞைக்காக, மேலிட உத்தரவிற்காக காத்திருந்தான் என நினைகின்றேன். ஏன் இப்படி தாமதிக்கின்றான் என்பதற்கு எனக்கு ஒரு சிங்கள நண்பன் பிற்காலத்தில் வேறு ஒரு காரணம் கூறினான். அதாவது சிறீ லங்கா போலிசார் சில குறிப்பிட்ட, தமக்கு பிடிக்காத, ஆனால் சட்டத்தின் மூலம் ஒன்றும் செய்துவிட முடியாத நபர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, வெருட்டுவதற்காக இவ்வாறு செய்வதாகக் கூறினான். அதாவது அந்த குறிப்பிட்ட நபர் வெளியில் தெருவில் போகும்போது அடிக்கடி ஒவ்வொரு முறையும் அந்த நபருக்கு சிறைவண்டியினை காண்பிப்பதன் மூலம் அவரது மனதில் அவர் ஒரு குற்றவாளி என்பதை பலாத்காரமாகத் திணிப்பதாகும். தினமும் இரண்டு மூன்று தடவைகள் இவ்வாறு உளவியல் தாக்குதல் தொடர்ந்து செய்யப்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் உளவியல் ரீதியாக சிறைப்பிடிக்கப்படுவார். இவ்வாறு செய்யும் போது ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி கூட சிறிது காலத்தின் பின் தான் ஒரு குற்றவாளி என்று நினைக்கத் தொடங்குவார். உளவியலில் இதை இன்டிமிடேசன் - Intimidation என்று அழைப்பார்கள். இந்த உளவியல் தாக்குதல் குறிப்பிட்ட சில சிங்களவர்களின் மீதும் நடத்தப்பட்டாலும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் சிறீ லங்கா போலிசினால் நடாத்தப்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரின் முன்னால் சிறை வண்டியை காண்பித்து அந் நபருக்கு உளவியல் தாக்குதலை நடாத்துவதற்காகவே எமது நாய் வண்டியின் வாகன ஓட்டுனர் காத்திருந்தான் என நினைக்கின்றேன். ஆனால் தான் இவ்வாறு உளவியல் தாக்குதல் செய்கின்றேன் என்று வாகன ஓட்டுனர் அறிந்திருக்க முடியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் மேலதிகாரி சொல்லும் நேரத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதே.

சுமார் ஏழு மணியளவில் நாய்வண்டி மகர சிறை நோக்கி புறப்படத் தொடங்கியது. உறவினர்கள் அழுதபடி அப்பாவித் தமிழ்க் கைதிகளிற்கு கையசைத்து பிரியாவிடை கொடுத்தார்கள். நாய் வண்டியினுள் இருந்ததே சிறையில் இருந்தது போன்ற அனுபவத்தையே எமக்கு தந்தது. அதாவது நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சிறையினுள் இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே கம்பிகளால் அடித்து வேயப்பட்ட யன்னலூடாக வெளியில் எட்டிப் பார்த்தார்கள். சிங்களக் கைதிகள் ஆரவாரம் போட்டு தெருவில் போய்வருபவர்களை கூவியழைத்து, சத்தம் போட்டு கும்மாளம் அடித்தார்கள். வெளியில் இருப்பவர்கள் எங்களை தருதலைக் கூட்டம் போவதாக நினைத்து சீ என்று பார்த்தார்கள். பைத்தியக்காரர்களை கொண்டு செல்லும் வண்டிக்கும், நாம் சென்ற சிறை வண்டிக்குமான வித்தியாசமாக என்னால் கூறக்கூடியது, பைத்தியக்காரர் வண்டியில் ஏற்கனவே பைத்தியமாக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், நாம் சென்ற வண்டியில் பைத்தியமாகிக் கொண்டு இருப்பவர்களும், பைத்தியமாகப் போகின்றவர்களும் இருந்தார்கள்.

இப்போது நன்றாக இருண்டுவிட்டது. சிறிது நேரம் நான் வெளியால் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுபின், எனது முகத்தை எனது மடியில் புதைத்தபடி நித்திரை செய்யத் தொடங்கிவிட்டேன். நாய் வண்டியினுள் இருந்து பிரயாணம் செய்தது மிகுந்த துன்பத்தை தந்தது. எனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு கேவலமான பயணத்தை நான் சந்திக்கவில்லை. திருநாவுக்கரசு நாயனார் கல்லுடன் கட்டி கடலுடன் போடப்பட்டபோது இவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில், முதலில் எங்களால் சுத்தமான காற்றை கூட நாய் வண்டியினுள் சுவாசிக்க முடியவில்லை. வண்டியினுள் வந்ததெல்லாம் செத்த பல்லியின் நெடியைக் கொண்ட காற்று மட்டும் தான். இவ்வாறு சுமார் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பயணித்தபின் (சரியாக எத்தனை மணித்தியாலங்கள் வண்டியினுள் இருந்தேன் என்று இப்போது என்னால் நினைவுபடுத்த முடியவில்லை) எமது நாய் வண்டி மகர சிறைச் சாலை வாசலில் போய் நின்றது.

எல்லோரும் வெளியில் இறக்கப்பட்டு, சிறைச்சாலையின் வெளியில் பாடசாலை அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குந்த வைக்கப்படுவது போல், நிலத்தில் இருக்க வைக்கப்பட்டோம். சிறைக் கதவு திறப்பதற்கு நீண்ட நேரம் சென்றது. நாம் பொறுமையாக சுமார் 20, 25 நிமிடங்கள் நிலத்தில் குந்தி காத்திருந்தோம். இறுதியாக சிறைக்கதவு திறக்கப்பட்டு நாம் உள்ளே எங்கோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு வைத்து எம்மிடம் இருந்த ஆபரணங்கள், மணிக்கூடு போனற விலையுயர்ந்த பொருட்கள் கழற்றி எடுக்கப்பட்டு காவாலாளிகளால் வாங்கப்பட்டு, கடதாசியிலும் அவற்றின் விபரம் பதியப்பட்டது. எம்முடன் வந்த சிங்களக் கைதிகள் ஆளாளுக்கு தமது சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோல் தம்பாட்டிற்கு கிடு,கிடுவென்று உள்ளே எங்கோ சென்றுவிட்டார்கள். போகும் போது நான் முன்பு குறிப்பிட்ட வயது போன சிங்களக் கைதி எனது முதுகில் தட்டி ஒன்றுக்கும் பயப்படவேண்டாம் என்று கொச்சைத் தமிழில் சொல்லி, சிங்கள சிறைக்காவலாளி ஒருவனிடமும் என்னைக் காட்டி ஏதோ சொல்லிவிட்டு தனது வீட்டு அறைக்கு போவது போல் போய்விட்டான். அவர்கள் சிறையினுள் வாழ்வதை விரும்பியிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், நாம் இனி நமக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற விடயம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முளுசிக் கொண்டு நின்றோம்...

இப்போது வெள்ளை உடை அணிந்த காவலாளிகள் வந்து நாம் போக வேண்டிய இடம் "பி வார்ட்" என்று கூறி அங்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். மேலும், இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் சிறைக்கூடத்தினுள் கொண்டுவரப்பட்டதும் எமது கைவிலங்குகள், கால்விலங்குகள் கழற்றப்பட்டு சுதந்திரமாக விடப்பட்டோம். இப்போது நாம் "பி வார்ட்" இன் வாசலில் காத்திருந்தோம். பசி வயிற்றைக் கிண்டியது.

இத்தருணத்தில் இந்தப் "பி வார்ட்" ஐ பற்றி கொஞ்சம் விளக்கம் தருவது நல்லது. இது சுமார் 30 மீற்றர் நீளமும், சுமார் 10 மீற்றர் அகலமும் கொண்டது என நினைக்கின்றேன். ஓடுகளால் வேயப்பட்ட, யன்னல்கள் அற்ற, ஆனால், சுமார் முக்கால்ச்சுவர் உயரத்தில் இருந்து இருமருங்கும், நீளப்பாட்டுக்கு இரும்புக்கம்பி யன்னலை (கிளிக்கூண்டு போல்) கொண்டது. ஒன்று அல்லது இரண்டு சிறிய மலசலகூடங்களை கொண்டது. இதன் வாயிலின் பக்கத்தில் பெரிய தண்ணீர்த் தொட்டி இருக்கின்றது. கைதிகள் இந்த மண்டபத்தின் இருமருங்கும் நீளப்பாட்டுக்கு சுவர்ப்பக்கமாக ஏழு, ஏழு பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குரூப் லீடர் இருந்தான். ஒவ்வொரு குழுவுக்குமான பொறுப்பாளனாக இவன் இருந்தான். ஒவ்வொரு குரூப்பிற்கும் அவர்கள் மண்டபத்தில் படுப்பதற்கும், இருப்பதற்கும் எவ்வளவு பகுதியைப் பயன்படுத்தலாம் என்று எல்லைகள் இருந்தது. மண்டபத்தில் நீளப்பாட்டுக்கு தூண்கள் இருந்தது. எனவே, இரு தூண்களிற்கு இடைப்பட்ட தூரம் ஒரு குரூப்பிற்கு உரிய வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்தது. ஏழு பேர் கொண்ட குரூப்பிற்கு தலைவனாக இருப்பவன் தனக்கு கீழ் உள்ள கைதிகளின் மண்டபத்தில் ஏற்படும் நலன்களைக் கவனிப்பவனாக இருந்தான்.

கீழே, "பி வார்ட்" இன் சிறிய விளக்கப்படத்தை பார்க்கவும்.... என்னால் இப்போது நினைவுபடுத்தக்கூடிய விபரங்களை தருகின்றேன்



சிறிது நேரத்தில் 'பி' வார்ட்டின் கதவு திறந்தது. நாங்கள் ஒருவர் பின் ஒருவராக வாசலில் அணிவகுத்து நிற்குமாறு கூறப்பட்டோம், பின் மெதுவாக எமது அணி உள்ளே முன்னேறத் தொடங்கியது. உள்ளே நாங்கள் வருவதை அறிந்த சிங்களக் கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சத்தங்கள், கூச்சல்கள் போட்டபடி 'பி' வார்ட்டின் உள்வாசலில் ஆரவாரத்துடன் கூடிவிட்டார்கள். நாங்கள் நடுக்கத்துடன் உள்ளே சென்றோம். நாம் அனைவரும் உள்ளே வந்ததும் 'பி' வார்ட்டின் இரும்புக் கதவு மூடப்பட்டுவிட்டது. இப்போது எமக்கு எதுவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எம்மை எவ்வாறு கவனிக்க வேண்டும், எம்மை என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானம் எடுப்பவர்களாக கொடூரமான குற்றங்கள் செய்த சிங்களக் கைதிகளே இருந்த்தார்கள். 'பி' வார்ட்டின் வாசலில் போலிசு காவலும் இல்லை.

இப்போது எம்மை ஒவ்வொருவராக 'பி' வார்ட்டின் வார்டன் ஆன சிங்களக்கைதி ஒருவன் விசாரிக்கத்தொடங்கினான். கொழும்பு பாதாள உலகத்தை சேர்ந்த இவன் சுமார் ஏழு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டிருப்பதாக வேறு ஒரு சிங்களக் கைதி பின்பு எனக்கு சொன்னான். இந்த வார்டனிற்கு பொடிகார்ட்டாக (மெய்ப் பாதுகாப்பாளர்கள்) இவனைப் போல் குற்றம் செய்த சுமார் ஆறு சிங்களக் கைதிகள் இருந்தார்கள். இந்த வார்டனிற்கு அப்போது சுமார் 25 வயது இருக்கும். அவனது மெய்ப்பாதுகாவலர்கள் சுமார் 16 - 25 வயதிற்குட்ட இளைஞர்களாக இருந்தார்கள். வார்டன் எம்மை விசாரணை செய்த அதேவேளை அவனது மெய்ப்பாதுகாவலர்களும் மற்றைய சுமார் நூறு கைதிகளும் எம்மை தனித் தனியே சிறு குழுக்களாக சூழ்ந்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள்.

இங்கு, பகிடி என்னவென்றால் இந்தச் சிங்களக் கைதிகள் களவு, கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை செய்த பெரிய குற்றவாளிகள், ஆனால், நாமோ ஒரு அப்பாவிகள்! முதலில் சிறீ லங்கா போலிசு, பின் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் விசாரணைகளை சந்தித்த நாம் இப்போது சிங்களக் கைதிகளின் விசாரணையையும் முகம் கொடுத்து அவர்கள் கேட்கும் கேள்விகளிற்கு பதில் கூறவேண்டி இருந்தது.

புலிகளுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என கேட்கப்பட்டோம். புலிகளில் நாம் இப்போது அல்லது முன்பு உறுப்பினர்களாக இருந்தோமா என கேட்கப்பட்டோம். இதைவிட, எம்மை ஒவ்வொருவராக உடற்சோதனை செய்து எமது உடலில் போராளிகள் இராணுவத்துடன் போரிடும் போது ஏற்படக்கூடிய விழுப்புண் அடையாளங்கள் இருக்கின்றனாவா என பரிசோதித்தார்கள். எமது உள்ளங்கைகளை அழுத்தி நாம் ஆயுதங்கள் பாவித்திருக்க கூடுமா எனவும் ஆராய்ந்தார்கள். எம்மை வெருட்டவும் செய்தார்கள். எம்மில் சிலருக்கு சலார், புலார் என்று விசாரணை செய்யும் போது அடிகளும் விழுந்தது. இறுதியில் சுமார் 15 நிமிடங்களின் பின் சிங்களக் கைதிகளின் விசாரணைகள் முடிவுக்குவந்தது. நாம் பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, நான் ஏற்கனவே கூறிய ஏழு பேர் கொண்ட குழுக்களில் சேர்க்கப்பட்டோம். இங்கு குழுக்களில் சேர்க்கப்படும் போது எந்தக் குழுவில் ஏழு பேருக்கு குறைவான உறுப்பினர்கள் இருக்கின்றார்களோ, அவ்வாறு இடவசதி உள்ள குழுக்களில் மட்டுமே நாம் சேர்க்கப்பட்டோம். ஆனால், 'பி' வார்ட் ஏற்கனவே கைதிகளின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்ததால் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட 18 தமிழ் கைதிகளில் இரண்டு பேருக்கு ஒரு குழுவிலும் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், இவ்விரண்டு தமிழ்க் கைதிகளும் சொல்லொணாத் துன்பங்களிற்கு ஆனார்கள். இவர்கள் மண்டபத்தில் ஆட்கள் போகும் நடைபாதையிலேயே படுத்து உறங்க வேண்டி இருந்தது. இதைவிட, இவர்களது நலங்களை கவனிக்கவென்றோ அல்லது இவர்களிற்கு ஏதாவது உதவிசெய்வதற்கென்றோ ஒருவரும் இருக்கவில்லை.

இங்கு எம்மை தமது குழுக்களில் சேர்க்கும் போது குழுத் தலைவர்கள், எம்மை ஒவ்வொருவராக தோற்றங்களை பார்த்து, விசாரணை செய்து தாம் விரும்பினால் மட்டுமே அவர்களது குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அதாவது இண்டர்வியூ மாதிரி என சொல்லலாம். இந்த குழுத் தலைவர்களை ஒன்றிணைத்து, ஆலோசனைகள் சொல்லும் வேலையை வார்டன் செய்து கொண்டிருந்தான். நானும் ஒரு குழுவில் ஒருமாதிரி சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இறுதியில், எமது குழுத் தலைவன் எம்மை 'பி' வார்ட்டில் தனது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூட்டிச் சென்றான். எம்மில் நான்கு தமிழர் இருந்தோம், ஏற்கனவே எமது குழுத் தலைவனையும், வேறு இரு சிங்களக் கைதிகளையும் சேர்த்து மொத்தமாக ஏழு பேர் இந்த குழுவில் இருந்தோம். இப்போது எமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கோயில் மடத்தில் இருப்பது போல் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தோம். மண்டபத்தினுள் மிகவும் மங்கிய வெளிச்சத்தில் ஓரிரு மின்குமிழ்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

ஒருவாறாக நாம் இறுதியில் சிறையினுள் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டோம். பழைய கைதிகள் விடுதலைபெற்று சிறையைவிட்டு செல்லும்போது அவர்கள் தமது உடமைகளை - துவாய், சாரம், சேட், படுக்கைவிரிப்பு போன்றவற்றை தொடர்ந்து சிறைவாசம் அனுபவிப்பவர்களிற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு போவார்கள். அவ்வாறு முன்பு பலர் பாவித்த பல சாரங்களை நிலத்துக்கு பாயாக போடப்பட்டுருந்தது. எமது குழுத் தலைவனே இவ்வாறு நாம் வீட்டில் படுக்கும்போது கட்டிலில் பெட்சீட், தலையணை போட்டு செட் பண்ணுவதுபோல் எமது ஏரியாவை அனைவரும் படுக்கும்வகையில் ஒழுங்குபடுத்தி இருந்தான். எல்லோரையும் அவன் படுக்குமாறு சொன்னான். படுக்கும்போது உருளுவதற்கோ அல்லது கையைக் காலைத் திருப்புவதற்கோ இடம் போதாது. செத்தபிணங்கள் சவப்பெட்டியினுள் கிடப்பது போல் நாம் எல்லோரும் அருகருகாக நேர்கோட்டில் படுக்க வேண்டி இருந்தது.

நாம் படுத்துள்ள இடம் மிகவும் நாற்றம் அடித்தது. கழிவுக் கால்வாய்கள் - காண் - உள்ள இடத்தில் அடிக்கும் கெட்டவாடை நாம் படுத்துள்ள இடத்தில் வீசியது. எனக்கு அங்கு படுத்திருக்கும்போது மலசலகூடத்தினுள் பாயைவிரித்து படுத்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான உணர்வு தோன்றியது. வேறு வழியில்லை. ஆளையாள் முறைத்துப்பார்த்துவிட்டு கூரையைப் நோக்கியபடி படுத்துவிட்டோம். நீண்ட பிரயாணம், அலைச்சல்கள், மன உலைச்சல்கள் காரணமாக மிகக் கேவலமான அந்த இடத்திலும் உடனடியாகவே கண்ணைமூடியதும் தூக்கம் வந்துவிட்டது. நாம் நன்றாக ஆழ்ந்ததூக்கத்திற்கு சென்றதும் திடீரென ஒரு பெரிய ஒலி கேட்டு திடுக்கிட்டு எழும்பினோம்.(இந்த ஒலி மணியோசையா அல்லது விசில் சத்தமா என்று இப்போது எனக்கு நினைவில்லை) எழும்பிப்பார்த்த போது அந்த நடுச்சாமத்தில் சிறைக்கூடம் முழுவதுமே விழித்து இருந்தது. எம்மை உடனடியாக எழும்பி லைன் அப் செய்யுமாறு கூறப்பட்டது. எனக்கு என்ன நடக்கின்றது, ஏன் எல்லோரும் லைன் அப் செய்ய வேண்டும் என்று விளங்கவில்லை. உடனடியாக லைனில் (வரிசை) வந்து நிற்காதவர்களிற்கு கொட்டாந்தடியால் மிகக் கடுமையாக அடிவிழுந்தது. அடியின் பயம் காரணமாக ஒரு நிமிடத்தினுள்ளேயே அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நின்றுவிட்டார்கள்.

வார்டின் கையில் ஒரு பெரிய புத்தகத்துடன் நின்றான். நான்கு, ஐந்து போலிஸ்காரரும் ஆயுதங்களுடன் உள்ளே வந்து இருந்தார்கள். இப்போது ஒவ்வொருவரினதும் மண்டையில் தட்டியபடி மிக விரைவாக சிங்களத்தில் நம்பர் சொல்லிக்கொண்டு கைதிகளின் தொகையை ஒருவன் கணக்கெடுத்தான். பின் ஒவ்வொருவராக பாடசாலையில் ஆசிரியருக்கு உள்ளேன் ஐயா என்று கூறுவது போல் இங்கு எமது பெயர் கூப்பிடப்பட்டது. பெயர் கூப்பிடப்படும்போது அந்தந்த பெயர்களிற்குரியவர்கள் தமது கைதி இலக்கத்தை உரத்துக்கூறினார்கள். புதிதாக வந்த எமது பெயர்கள் கூப்பிடப்பட்ட போது எமது கைதி இலக்கங்கள் என்ன என்று எங்களுக்கு கூறப்பட்டு, அடுத்தமுறை எமது பெயர் அழைக்கப்படும்போது நாமும் எமது கைதி இலக்கத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் பொல்லினால் அடிவாங்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டோம். எனக்கு சிங்களம் அப்போது தெரியாது, எனக்கு எனது கைதி இலக்கத்தை சிங்களத்தில் எப்படி சொல்வது என்று ஒருவன் எனக்கு கூறினான். நானும் பயத்தில் அதை சிங்களத்தில் மனப்பாடம் செய்துவைத்தேன். தமது கைதி இலக்கங்களை மறந்த சில சிங்களவர்களிற்கு பொல்லினால் கடுமையான அடிகொடுக்கப்பட்டது. இறுதியில் "பி" வார்ட்டினுள் இருந்த கைதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியபின் போலீசுகாரர் வெளியேறிவிட்டார்கள். கைதிகள் அனைவரும் திரும்பவும் தத்தம் இடங்களிற்கு படுக்கச் சென்றார்கள். இப்படி நடுராத்திரியில் அடிக்கடி கைதிகளை எண்ணும் நடவடிக்கை நடைபெறும் என்பதை எமது குழுத் தலைவன் எமக்கு விளங்கப்படுத்தினான். அவன் சிங்களத்தில் கதைத்தாலும் சிறிதளவு கொச்சைத்தமிழில் கதைத்தான். அவன் நீண்டகாலமாக அடிக்கடி சிறையினுள் இருப்பதால், சிறைக்கு அடிக்கடி வரும் எம்மைப் போன்றவர்களிடம் இருந்துதான் தமிழ் கற்றதாக அவன் எமக்கு சொன்னான். அவன் சிங்களத்தில் கூறியவற்றை எம்மில் உள்ள சிலர் எமக்கு தமிழில் மொழிபெயர்த்து சொன்னார்கள். இவ்வாறு இரவில் கைதிகளின் தூக்கத்தை கலைத்து கணக்கெடுப்பது கைதிகள் சிறையைவிட்டு களவாக ஓடிவிடாதிருக்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும் இந்த நடைமுறை மிருகத்தனமான முறையில் பிரயோகிக்கப்பட்டதால் இது மிகத்திட்டமிடப்பட்ட ஒரு உளவியல் சித்திரவதையாகவே எனக்கு தெரிந்தது. இதை எப்படி விளங்கப்படுத்தலாம் என்றால் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது உங்கள் மீது ஐஸ்-குளிர்தண்ணீரை கொண்டுவந்து கொட்டினால் உங்களுக்கு எப்படி விசர் வருமோ இதைவிட பன்மடங்கு அதிகமான துன்பமாக இருந்தது. இதை நேரில் அனுபவித்தாலே இதன் கொடுமையை புரிந்துகொள்ளமுடியும்.

இவ்வளவு நேரமும் கதையில் வந்த சம்பவங்களை ஒரு ஒழுங்குமுறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக எழுதி இருந்தேன். இனி சிறையைவிட்டு வெளியேறும்வரை நான் கூறப்போகும் விடயங்கள் அவை நடைபெற்ற நாட்களின், காலத்தின் வரிசைக்கிரமத்தில் எழுதப்படவில்லை. ஏனெனில், வரிசைக்கிரமம், ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற சம்பவங்கள் எனக்கு மறந்துவிட்டது. எனவே, இப்போது என்னால் நினைவுபடுத்தக்கூடியவற்றை வெறும் சம்பவங்களாகவும், வர்ணனையாகவும் எழுதுகின்றேன்.

சிறையினுள் காலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் வெறுந்தேத்தண்ணியும் தொட்டுக் குடிக்க சீனியும் தரப்படும். எமது குழுத் தலைவன் போய் வாங்கிவந்து எமக்கு பகிர்ந்து தருவான். அதற்கு அவன் பாவிக்கும் பாத்திரங்களை பார்ப்பதற்கு நாய் பூனைக்கு நாம் வீட்டில் சாப்பாடு போடும் கிண்ணங்கள் போல இருக்கும்.

தேத்தண்ணி தரப்படும் அதேநேரத்தில் பாணும், மாசிக் கருவாட்டு சம்பலும் தரப்படும். நான் அப்போது மாமிசம் சாப்பிடுவதில்லை. அப்படி பழக்கமும் இருக்கவில்லை. ஆனால், பசி காரணமாக அவற்றை, கிடைப்பவற்றை உண்ண வேண்டி இருந்தது. பாணின் தோற்றம் நாம் வழமையாக ஊரில் வாங்கும் கடைப் பாணில் இருந்து சற்று வித்தியாசமானது. அதாவது ஒரு இறாத்தல் பாணை சரிசமமான நான்கு துண்டுகளாகப் பிரிக்கக்கூடியவகையில் வெளித்தோற்றத்தில் அடையாளம் போடப்பட்டிருக்கும். அந்த அடையாளம் போடப்பட்ட பகுதியூடாக கையால் பிய்க்கும் போது பாண் கால் இறாத்தல் பகுதிகளாக பிய்படும். ஒருவருக்கு காலை உணவாக கால் இறாத்தல் பாண் மட்டுமே வழங்கப்படும்.

பிறகு மதிய உணவு சுமார் பகல் ஒரு மணியளவில் வழங்கப்படும். இதற்கு நாம் நாய், பூனைக்கு சாப்பாடு கொடுக்கும் தட்டுக்கள் போன்ற நாற்றம் மிக்க தட்டுக்களையும், கிண்ணங்களையும் (ஊரில் உள்ள சிரட்டை இதைவிட திறம் என்று கூறலாம்) தூக்கிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கவேண்டும். முதலில் இவ்வாறான நாற்றம் மிகுந்த தட்டுக்கள் கிடைப்பதே பெரிய விடயம். ஏதோ எமது குழுத் தலைவனின் முயற்சிகாரணமாக எமக்கு ஆளுக்கொரு தட்டு கிடைத்துவிட்டது.

மத்தியானச் சாப்பாட்டில் சோறும், வேறு ஒரு கறியும், ஒரு அவித்த முட்டையும் தரப்படும். இரவுச் சாப்பாடு தரப்படுவதில்லை. எனவே, பலர் மத்தியானச் சோற்றை மிச்சம் பிடித்து, சேமித்து வைத்து இரவில் சாப்பிடுவார்கள். ஆனால், எமது மிஞ்சிய அந்த எச்சில் சோற்றையும் சிலவேளைகளில் நாம் அசட்டையாக இருக்கும் நேரத்தில் வேறு யாராவது களவெடுத்து சாப்பிட்டுவிடுவார்கள்.

நான் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு, இரவுக்காக வைத்திருந்த மிகுதி எச்சில் சோற்றை பல தடவைகள் என்னுடன் இருந்த சிங்களக் கைதி ஒருவனுக்கு கொடுத்திருந்தேன். அவனால் பசியை தாங்க முடியாது. வாய் திறந்து எனது மிச்ச சோற்றை தருமாறு கேட்பான். பாவம் என்று கொடுத்துவிடுவேன். கொடுத்ததுதான் தாமதம் அவுக் அவுக் என்று சில நொடிகளில் அவ்வளவு சோற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவான். இந்தக்கேவலத்தை பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கும். அதாவது வீட்டில் கட்டி வைத்திருக்கும் நாயிற்கு சாப்பாடு போடும் போது அது எவ்வளவு ஆரவாரம் செய்து, அந்தரப்பட்டு விரைவாக பசியில் உணவை உண்கின்றதோ, சரியாக அந்த நிலமையே எமக்கும்!

சிறையில் வேறுபகுதிகளில் இருந்த கைதிகளிற்கு எமக்கு தரப்பட்டதை விட சிறந்த உணவு வழங்கப்பட்டது. அவற்றை அப்போது நாம் பசியில் நாய்களைப்போல், வீணீர் வடித்தபடி, வாய் பார்த்துக் கொண்டு இருந்தோம். உணவு சமைப்பது, பரிமாறுவது எல்லாம் சிறையில் இருந்த கைதிகளே. சில வேளை எம்மைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரும் உறவினர்கள் உணவுப்பண்டங்கள் தரும்போது நாம் எல்லோரும் அவற்றை பிரித்து, பகிர்ந்து உண்போம். சிறையில் தரப்படும் சோற்றினுள் தாராளமாக வஞ்சகமின்றி கற்கள் இருக்கும். இதைவிட, வரிசையில் நிற்கும்போது நெரிசல்பட்டால்(தள்ளுப்படல்) அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் குண்டாந்தடியால் தாராளமாக அடியும் நடக்கும். ஆனால், சாப்பாட்டுக்கு சண்டைபிடித்து அடிவாங்குபவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்களாகவே இருந்தனர். சில வேளைகளில் சோறு மிஞ்சி விட்டால் பின்னேரம் நான்கு மணியளவில் எஞ்சி இருப்பவற்றை அதிட்டம் அடித்து அந்தநேரம் அந்தவிடத்தில் நிற்கும் கைதிகளிற்கு கொடுப்பார்கள்.

ஆனால், சிறைவார்டின், மற்றும் அவனது மெய்ப்பாதுகாவலர்கள் (அவனது வால்கள்) மிகவும் உயர்ந்தவகையான உணவுகளை (சாப்பாட்டு கடையில் கிடைக்கும் புரியாணி போன்ற உணவுகளை) உண்பார்கள். இவர்களிற்கு தினமும் தாராளமாக உணவுகள், குடிபானம், சிகரெட்டு, மற்றும் இதர தேவைகள் சிறையில் இருக்கும் போலிசார் மூலம் எமது "பி" வார்ட்டில் இருந்த பின்பக்க சிறிய யன்னல் ஒன்றின் மூலமாக கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் பாதாள உலக கோஸ்டியை சேர்ந்தவர்கள். எனவே அவர்களது சகல தேவைகளும் கச்சிதமான முறையில் சிறைக்கு வெளியில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. மேலும், இவர்கள் படுக்கும் மெத்தைகள், தலையணைகள், போர்வைகள், உடுத்தும் உடுதுணிகள் மிகவும் விலை உயர்ந்தவை. இவை எல்லாம் இரகசியமான முறையில் இவர்களிற்காக உள்ளே கொண்டுவரப்பட்டு இவர்கள் ராஜாக்கள் போல உள்ளே இந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். வார்டின், மற்றும் அவனது வால்கள் பெரும்பாலும் அழகிய வண்ணங்களில் ரனிங் சோர்ட்சும், ஆமர்கட் பெனியனுமே போடுவார்கள்.

காலை சுமார் எட்டு மணியளவில் “பி” வார்ட்டின் பெரிய இரும்புக்கதவு திறக்கப்படும். உள்ளே உள்ள கைதிகள் இரும்புக்கதவு மாலை சுமார் நான்கு முப்பது அளவில் மூடப்படும்வரை வெளியில் நிற்கமுடியும். சிறைச்சாலையின் மற்றைய பகுதிகளிற்கு சுதந்திரமாக நடந்துதிரிய முடியும் எனவும் நினைக்கின்றேன். சிறைச்சாலையினுள் ஒரு நூலகமும், இந்துக்கோயிலும் இருப்பதாகவும் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவதாகவும் ஒரு சிங்களக்கைதி சொல்லி இருந்தான். ஆனால் நான் எம்மவர்களுடன் மட்டும் சேர்ந்து திரிந்ததால் எனக்கு அங்கு போவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எம்மவர்கள் பதினெட்டுபேரும் தனியாகப் பிரிந்து ஒரு ஒதுக்குப்புறமாக மரநிழல் ஒன்றின் கீழ்ப்போய் இருந்து அங்கிருந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொருத்தரும் தங்கள் கவலைகளை மற்றவர்களிற்கு சொல்லி பரிமாறிக்கொள்வோம்.

“பி” வாட்டினுள் நடக்கும் கூத்துகளை சொல்லுகின்றேன். கேளுங்கள்… இதன் உள்ளே இருக்கும் போது பெரிய குசினியுள் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். ஏனென்றால் சிங்கிளக் கைதிகள் சிறிய, சிறிய குழுக்களாகச் சேர்ந்து குடு (போதை – கஞ்சா, அபின் போன்றவை)அடித்துக்கொண்டு இருப்பார்கள். இதன்போது மிகுந்த நாற்றமும், புகையும் ஏற்படும். இதனால் வார்ட் முழுவதும் வீட்டில் சாம்பிராணி புகை காட்டும் போது வருவது போல் ஒரே புகை மண்டலமாக இருக்கும். இவர்கள் டின் பிஸ் (அடைக்கப்பட்ட மீன் ரின்) பேணி போன்ற தோற்றமுடைய பேணிகளினுள் எதையோ ஊற்றி எரிப்பார்கள் (கற்பூரம் கொளுத்துவது போல்). பின் அதனுள் நுகர்ந்து போதையில் இருப்பார்கள். அவர்கள் எப்படி குடு அடிக்கின்றார்கள் என்பதை மிக அருகாக அவதானிக்க விரும்பவில்லை. ஆனால், இதன்போது வரும் நாற்றம் தாங்க முடியாது. சிலர் படுக்கை, சாப்பாட்டு நேரம் தவிர மிகுதி நேரம் அனைத்தும் இவ்வாறு புகைகிளப்பி குடுஅடித்துக்கொண்டே இருப்பார்கள்.

இதைவிட, உள்ளே அனைவரும் புகைக்கும் சுருட்டு போன்ற ஒரு பிரபலமான பதார்த்தம் உள்ளது. இதை புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள அனைத்துக் கைதிகளும் தங்கள் கைகளினாலேயே செய்து சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதாவது ஒரு கடதாசியை சிறிய துண்டாக கிழித்து பின் அதை சுமார் மூன்று அங்குல நீளமுள்ள குழாய் போல உருட்டி (சுருட்டி) அதனுள் புகையிலைத் தூளை போட்டு அடைத்துவிடுவார்கள். பின் படுக்கை, சாப்பாடு தவிர்ந்த மற்றைய நேரங்களில் தாம் செய்த சிகரெட் போன்ற பொருளைப் பற்றவைத்து புகைத்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கான தூள், மற்றும் குடு போன்றவை போலிசார் மூலம் வார்ட்டின் பின்புறம் இருந்த சிறிய யன்னல் ஊடாக காசுக்கு விற்கப்பட்டு வந்தது. அதாவது இதை வார்டினுள் உள்ள ஒரு முகவருக்கு முதலில் விற்கப்படும். முகவர் மற்றையவர்களிற்கு அவற்றை சில்லறையாக விற்பார். சிறையினுள் பெரும்பாலும் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக இவ்வாறு தமது குடு, புகைத்தல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக காசு வைத்திருந்தார்கள். இந்தக்காசு இவர்களிற்கு எம்மைப்போன்ற தமிழ்க்கைதிகள் மூலமும் கிடைத்திருந்தது. சிங்களக்கைதிகள் எப்போது பார்த்தாலும் தமிழ்க்கைதிகளை காசுகேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். சிறையினுள் எமக்கு ஏதாவது பிரச்சனைகள் வராமல் தாம் பாதுகாப்பு தருவோம் என்றும், அடுத்தமுறை திரும்பவும் பிடிபட்டு இந்தச் சிறையினுள் வந்தால் எம்மை நன்றாகக் கவனிப்போம் என்றும், சிங்கிளக்கைதிகள் எமக்கு கூறி எம்மிடம் அதற்காக காசு தருமாறு தொல்லைப்படுத்தி வந்தார்கள்.

சிறையினுள் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் சிங்கிளக் கைதிகளிடமிருந்து பொருட்களை, சேவைகளை பெற்றுக்கொள்ளும் நுகர்வோராக தமிழ்க்கைதிகளே இருந்தார்கள். எமக்கு பாவிப்பதற்கு தேவையான தண்ணீர், பற்பசை, போர்ப்பதற்கு தேவையான பழைய போர்வை, பழைய சாரம், பழையை துவாய், பிஸ்கட் பெட்டிகள், குளிர்பானம் போன்றவை விற்கப்பட்டது. இந்தப் பொருட்கள் எல்லாம் சிங்கிளவர்களிற்கு பின்யன்னல் வழியாக வேறு முகவர்கள் மூலம் கிடைத்திருந்தது.

வார்ட்டினுள் அடிக்கடி சிங்கிளக்கைதிகளிடையே சண்டைகள் ஏற்படும். பெரும்பாலும் ஒருவனது பொருளை இன்னொருவன் களவெடுப்பதனாலேயே இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கும். இறுதியில் வார்டின் வந்து இருவருக்கும் குண்டாந்தடியால் அடிபோட்டு பிரச்சனையை தீர்த்துவைப்பான். அடிவாங்கும் சிங்களவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். மிருகத்தனமான முறையில் வார்டின் அவர்கள் மீது பொல்லினால் உடம்பு முழுவதும் விளாசி அடிப்பான்.

தமிழ் கைதிகள் எதிர்கொள்ளும் இன்னொரு துன்பம் உறவினர் வருகை. உறவினர் வந்தாலும் எமக்கு தொல்லை, வராவிட்டாலும் தொல்லை. உறவினர்கள் வந்தால், அதுபற்றி அறிந்த போலிசும், சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளிடம், உறவினர்களிடம் கேட்டு தமக்கு காசு வேண்டித் தருமாறு சொல்லி தொந்தரவு கொடுப்பார்கள். எம்மைப் பார்க்க உறவினர்கள் வந்தால் ஒரு போலிசுகாரன் அல்லது சிங்களக் கைதி மூலம் எம்மை யாரோ உறவினர் பார்க்க வந்துள்ளார்கள் எனக்கூறி அறிவித்தல் வரும். இவ்வாறு எம்மைச் சந்திக்க யாரோ வந்துள்ளார்கள் என்பதை அறிந்தவுடன் சிங்களக்கைதிகளும், போலிசும் எம்மிடம் வந்து நாயாய் வழிவார்கள். அவர்கள் வாயில் இருந்து எச்சில் ஆறாகப் பாயும். தமக்கு உறவினர்களிடம் கேட்டு காசு கட்டாயம் வாங்கித் தரும்படி கட்டாயப்படுத்துவார்கள். அப்படிச்செய்தால் எம்மை தாம் சிறையில் நன்றாகக் கவனிப்போம் என்று பசப்பு வார்த்தைகள் கூறுவார்கள். தமிழ்க் கைதிகள் பயத்தில் இவர்கள் கேட்டபடி உறவினர்களிடம் காசு வாங்கி கொடுத்துவிடுவார்கள். ஆகக்குறைந்தது ஐம்பது ரூபாயாவது வாங்கிக் கொடுப்பார்கள். காசை கொடுக்கும்போது சிறைவார்டன் மற்றும் சிறையில் கொஞ்சம் அதிகாரம் உடையவர்களிடமே கொடுப்பார்கள். இதன்மூலம் தமது பிரச்சனைகள் சிறையில் ஓரளவுக்காவது குறையும் என்ற எதிர்பார்ப்பே இதற்கான காரணம். மேலும், உறவினர்கள் எமது தேவைக்கு களவாக பணம் தருவதை சிங்களக்கைதிகள் அல்லது போலிசு கண்டுவிட்டால் அதைத் தட்டிப்பறித்து எடுத்து விடுவார்கள். சிறைக்கைதிகளிற்கு உறவினர்கள் பணம் கொடுப்பது சிறை விதிகளிற்கு முரணானது என நினைக்கின்றேன். பலதடவைகள் தமிழ்க் கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் அவர்களிற்கு பணம் கொடுத்தபோது அவற்றை கண்முன்னாலேயே சிங்களவர்கள் தமது சொந்தத்தேவைக்காக பறித்து எடுத்தார்கள். எம்முடன் இருந்த ஒரு தமிழ்க்கைதி உறவினர் ஒருவரிடம் நைசாகப் பணத்தைப் பெற்று, தனது செருப்பினுள் ஒளித்துக் கொண்டுவந்தபோதும், மோப்பம் பிடித்த ஒரு சிங்களக்கைதி அவர் காலினுள் ஒளித்துக் கொண்டுவந்த நூறு ரூபாயைப் பறித்துவிட்டான். இவ்வாறு எமது காசு பறிக்கப்பட்டாலும், அல்லது எமக்கு ஏதாவது தீங்கு இழைக்கபட்டாலும் நாம் பயத்தில் ஒருவரிடமும் முறையிடுவதில்லை. மேலும், அவ்வாறு யாரிடமாவது முறையிட முடியுமா என்றும் எமக்கு தெரிந்திருக்கவில்லை.

உறவினர்களுடன் கதைக்கும் போது ஒரு அறையினுள் கொண்டுபோய் விடப்படுவோம். இந்த அறை சிறை வாயிலிற்கு அருகில் உள்ளது. இதில் நீளமான ஒரு பெரிய மேசை உள்ளது. இந்த மேசையில் எதிர்ப்புறம் உறவினர்களும், இன்னொரு புறம் நாமும் இருப்போம். போலீஸ்காரர் எம்மை அவதானித்துக் கொண்டிருப்பார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் கதைப்பதற்கு அனுமதிக்கப்படும். உறவினர்கள் எம்மைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதிலேயே பெரும்பாலும் இந்த ஐந்து நிமிடங்களும் கழிந்துவிடும். சிலவேளைகளில், உறவினர்களுடன் கையாலாகாத வழக்கறிஞர்களும் வருவார்கள்.

உறவினர்கள் எம்மைப்பார்க்க வந்தால் எமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். யாரோ சிறைக்கு வெளியில் இருந்து எம்மை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி எடுக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படும். சிலருக்கு அவர்களை பார்க்க ஒருவருமே வருவதில்லை. சிலருக்கு உறவினர்கள் தம்மை பார்க்கவருவது பிடிக்காது. இப்படி வெவ்வேறு விதமான மனநிலைகளில், சூழ்நிலைகளில் நாம் இருந்தோம். ஆனால், உறவினர்கள் வரும்போது கொண்டுவரும் சாப்பாடு, மற்றும் உடுதுணி போன்றவை எமக்கு பேருதவி புரிந்தது. உறவினர்கள் எம்மைக் கண்டு சென்றதும் சிறையில் உள்ள பல சிங்களக்கைதிகள், மற்றும் போலிசுகாரர் எம்மிடம் வந்து தமக்கு காசு தருமாறு கேட்டு திரும்பவும் தொந்தரவு தருவார்கள். இதனால், எம்மில் சிலர் உறவினர்களிடம் இனி தம்மைப் பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்கள். உறவினர்கள் உணவுப் பண்டங்கள் ஏதாவது தந்தால் நாம் அவற்றை பிரித்து பங்குபோட்டு உண்போம். சிலவேளைகளில் மற்றவர்களை உறவினர்கள் பார்க்கவரும்போது, ஆனால் எம்மைப் பார்க்க ஒருவரும் வராவிட்டால், எமக்கு பெருங் கவலையாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். எம்மில் சிலர் தம்மை தினமும் யாராவது பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உணவும் உண்ணாது காத்துக்கிடப்பார்கள்.


இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கின்றது... உடனடியாக சொல்ல முடியவில்லை... மெல்ல, மெல்ல கூறுகின்றேன். உங்கள் பொறுமைக்கு நன்றி...

காலையில் எமக்கு நான்கு பேருக்கென பயன்படுத்துவதற்கு ஒரு கலன் தண்ணீர் தரப்படும். அதைவைத்து அன்றைய பொழுதை நான்கு பேரும் சமாளிக்க வேண்டியதுதான். நாங்கள் ஒவ்வொருவரும் வாயை கொப்பளித்து, முகத்தை சாதுவாக தண்ணீரில் நனைக்க மாத்திரமே இந்த தண்ணீர் போதும். மற்றைய சிங்கள கைதிகளிடம் பற்பொடி கொஞ்சம் கடனாக வாங்கி பல் மினுக்குவோம். காசு கொடுத்தால் தேவையான அளவு தண்ணீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. குளிக்கவும் முடிந்தது. ஆனால், சிறையினுள் எவராவது குளித்ததை நான் காணவில்லை. சிலவேளைகளில் சிறைவார்டன், மற்றும் அவனது வால்கள் தமது அதிகாரத்தை பாவித்து வீட்டில் தாராளமாக தண்ணீரில் அள்ளி குளிப்பது போல் குளிப்பார்கள். "பி" வார்ட்டினுள் உள்ள தண்னீர் தொட்டிக்கு சிங்களக் கைதிகள் தண்ணீரை வேறு எங்கோ அள்ளிக்கொண்டுவந்து (தயிர் முட்டியை தடியில் இருபுறமும் கட்டி தோளில் வைத்து தூக்கிவருவது போல்) தண்ணீர் தொட்டியை நிரப்புவார்கள். தண்ணீர் தொட்டி நிரப்பும் வேலை தினமும் காலை நடைபெறும். ஆனால், எங்களுக்கு தண்ணீர்தான் கிடைக்கவில்லை.

இனி மலசலகூடத்தை பார்த்தால், இப்போதும் நினைக்கவே வாந்தி வருகின்றது. முதலில் மலசல கூடத்தினுள்ளேயே போகமுடியாது. அதன் வாசலிலேயே மனிதக் கழிவுகள் கழிக்கப்பட்டிருக்கும். கழிகள் மலசலகூட நிலம் எங்கெனும் பரவி அகோரமாகக் காணப்படும். நாற்றம் தாங்க முடியாது. நாமும் நிலத்தில் முழுக்காலையும் பதிக்காது குதிக்காலில் எட்டி நின்று வஞ்சகமில்லாமல் எமது பங்கிற்கு கழிவை தள்ளிவிடுவோம். எமக்கு காலிற்கு போடுவதற்கு செருப்பும் இல்லை. விலங்குகள் எம்மைவிட சுத்தமாக இருந்திருக்கும் என்று கூறலாம். மலசலகூடம் ஏன் ஒழுங்காக துப்பரவு செய்யப்படுவதில்லை என்று தெரியாது. "பி" வார்ட்டினுள் இருந்தது தவிர, நாங்கள் வார்ட்டிற்கு வெளியில் நிற்கும் நேரங்களில் கழிவகற்ற வசதியாக வேறு ஏதாவது மலசலகூடங்கள் சிறையினுள் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் மலசலம் கழிப்பதை இயலுமானளவு நாங்கள் தவிர்த்து வந்தோம்.

சிறையினுள் வார்டன் ராசா மாதிரி இருப்பான். அவனைச் சுற்றி அவனது வால்கள் நிற்பார்கள். வார்டன் உயர்தரமான மெத்தையின் மீதே ஏறி இருப்பான். படுப்பதும் அதில்தான். ஏதாவது பிரச்சனை என்றால் மற்றவர்கள் அவன் மெத்தையில் படுத்து இருக்கும் இடத்திற்கு சென்று முறையிட வேண்டும். வால்கள் அமைச்சரவை போல் செயற்படுவார்கள். குறுக்கு விசாரண நடத்துவதும் வால்கள் தான். அரசன் தீர்ப்பை மாத்திரம் கூறுவான். வார்டன் படுத்து இருக்கும் போது நான்கு பேர் அவனுக்கு உடம்பு பிடித்துக்கொண்டு இருப்பார்கள். வலது கையை மசாஜ் செய்ய ஒருவன், வலது காலை மசாஜ் செய்ய ஒருவன், இடது கையை மசாஜ் செய்ய ஒருவன், இடது காலை மசாஜ் செய்ய ஒருவன்... இவ்வாறு அரசனுக்கு மந்திரிகள் சேவகம் செய்வார்கள். அரசன் ஆணையிடும் போது மந்திரிகள் பாட்டுப்பாடி அரசனை மகிழ்விக்கவும் செய்வார்கள். வார்டின் படுக்கும் இடத்திற்கு அருகாக அவனது வால்கள் தவிர்ந்த வேறு கைதிகள் அணுக முடியாது. மற்றவர்கள் அவன் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளியே இருக்கவேண்டும் என்பது அவனது ஆணை.

சில நாட்களில் நாம் சிறைக்கூடத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது அங்க அடையாளங்கள் பதியப்பட்டன. கை, கால்களில் இருக்கும் மச்சம் மற்றும், காயங்கள் காரணமாக வந்த அடையாளங்கள் பதியப்பட்டன. இதன்போது அங்கு ஒரு தமிழ் போலிஸ் அதிகாரியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். முதலில் சிங்களத்தில் பேச்சுத்தந்த அவர் இறுதியில் ஒரு தமிழரென அறிந்துகொண்டோம். குறிப்பிட்ட அதிகாரி நல்லவர் போல் தோற்றமளித்தார். எம்முடன் உரையாடத்தொடங்கி சிறிது நேரத்தின் பின் சரளமாக ஒவ்வொருவராக விசாரித்து உரையாடினார். எமது நிலமைகளைக் கேட்டு மிகவும் கவலைப்பட்டார். தமக்கு நாம் ஒரு குற்றங்களும் செய்யவில்லை என்று மிக நன்றாகத் தெரியும் என்றும் கூறினார். தாம் மேலிடத்திற்கு குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவி தமிழ் இளைஞர்களை இங்கு அனுப்பவேண்டாம் என்று பலதடவைகள் கூறியும், அவர்கள் தொடர்ந்தும் அப்பாவி தமிழ் இளைஞர்களை பிடித்து இங்கு அனுப்புகின்றார்கள் எனக்குறைகூறிக் கொண்டார். இவரது பேச்சைக் கேட்ட எமக்கு சிறிதளவு ஆறுதலாக இருந்தது. சில மணிநேரங்களில் எமது அடையாளங்கள், மற்றும் வயது, பால், அப்பா, அம்மா பெயர்கள், ஊர், விலாசம், பிடிக்கப்பட்ட காரணம் என ஒரு நீண்ட பட்டியல் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் நிரப்பப்பட்டபின் நாம் எமது வார்ட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டோம்.

எம்முடன் பிடிபட்ட பலரில் ஒருவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த துணிவுமிக்க இளைஞர். அவருக்கு அப்போது சுமார் முப்பது வயது இருக்கும். மற்றவர்கள் போல் அல்லாது சிறிது வித்தியாசமாக இருந்தார். பல தடவைகள் சிறைவார்டனிற்கு பல விசயங்களில் அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நாமும் இதைப் பெரிதாகக் கணக்கில் எடுக்கவில்லை. ஆனால், அன்று இவர் வார்டனுடன் எக்கச்சக்கமாக வாக்குவாதப்பட்டு கொழுவிவிட்டார். நிலமை மோசமாகிவிட்டது. இறுதியில் வார்டனுடன் "பி" வார்டினுள் அடிபாடு செய்வதற்கு தயாராகிவிட்டார். வார்டும் வெளிவாயில் கதவு மூடப்பட்டுவிட்டது. ஆபத்திற்கு நாம் வெளியில் ஓட முடியாது. போலிசு பாதுக்காப்பும் எமக்கு இல்லை. சிங்களக்கைதிகள் எம்மைத் தாக்கினால் எம்மை நாம் பாதுகாப்பது தவிர வேறு ஆயுதமோ அல்லது உதவியோ ஒன்றும் எம்மிடம் இல்லை. இந்நிலையில் சண்டை முற்றிவிட்டது. நாம் கை, கால் நடுங்க என்ன நடக்கப்போகின்றதோ எனப் பயந்துகொண்டிருந்தோம். ஆனால், குறிப்பிட்ட தமிழ் இளைஞர் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக்கைதிகள் சுற்றிநிற்க வார்டனுடன் பயமின்றி வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருந்தார். நாம் சற்று தள்ளி நின்று நடப்பதை அவதானித்துக் கொண்டு இருந்தோம். இறுதியில் வார்டன் தன்னுடன் நேரடிச் சண்டைக்கு வருமாறு குறிப்பிட்ட தமிழ் இளைஞருக்கு அழைப்புவிடுத்தான். அவரும் உடனே பயமின்றி சாரத்தை மடித்து கொடுக்கு கட்டியபின், நிலை எடுத்து நேரடிச் சண்டைக்கு தயாரானான். வார்டன், சண்டையின்போது அவருக்கு கை, கால்கள் உடைக்கப்படும், இரத்தம் கொட்டும், சிலவேளைகளில் அவரது உயிருக்குகூட ஆபத்து வரும் என வெருட்டினான். ஆனால், அவரோ அவன் கூறிய அதே பதிலை திருப்பி அவனுக்கு கூறி, தான் எதற்கும் தயார் எனச் சொல்லியபடி வார்டனை அடிப்பதற்க்காக நெருங்கிச் சென்றார். இதனால் சிறையில் பதற்றம் கூடிவிட்டது. அனைத்து சிங்களக்கைதிகளும் இருவரையும் சுற்றுநின்று என்ன நடக்கப்போகின்றது எனப் பார்த்துக் கொண்டிருந்தனர். பலருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஒருவருக்கும் வார்டனுடன் அடிபடுவதற்கு துணிவு வராது. வார்டனின் வால்களும் இப்போது குறிப்பிட்ட தமிழ் இளைஞனை பார்த்து பயந்தபடி தள்ளி நின்றார்கள். வார்டன் சண்டையை ஆரம்பிப்பதற்கு ஒன்று, இரண்டு, மூன்று என உரக்கக்கூறிவிட்டு இறுதியில் திடீரென தமிழ் இளைஞனின் காலில் விழுந்து அட்டாங்க நமஸ்காரம் செய்து, தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். கொச்சைத் தமிழில் கதைத்தான். அண்ணே நான் உங்களுடன் அடிபடவில்லை என்று கூறினான். இதனால் எல்லோருக்கும் பேராச்சரியம் தோன்றியது. இனி குறிப்பிட்ட தமிழ் இளைஞரை தான் ஒன்றும் கேட்கமாட்டேன் என்றும், அவருக்கு சிறையினுள் சகல சுதந்திரங்களும் வழங்கப்படும் என்றும், தாம் இருவரும் இனி நண்பர்கள் என்றும் அனைவரினதும் முன்னிலையில் வார்டன் அறிவித்தான். அடுத்தநாள் குறிப்பிட்ட தமிழ் இளைஞர் எம்முடன் கதைத்தபோது தான் ஏன் அப்படி செய்தேன் என்று சொன்னார். தான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை தேவையில்லாமல் சிறையில் அடைத்துவைத்துள்ளார்கள் என்றும், ஆனால் தான் சிறைக்குவந்தபின் ஒன்றுக்கும் இப்போது பயப்படவில்லை என்றும் கூறினார்.

கிழமை நாட்களில் (வேலை நாட்களில்) தினமும் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் எமது வார்ட்டினுள் நுழையும் பொலிசார் அன்றைய தினம் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலை வாசிப்பார்கள். பிணைமூலம் விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலும் இந்த நேரத்தில் வாசிக்கப்படும். இதனால், நாங்கள் கிழமை நாட்களில் தினமும் எமது பெயர்கள் வாசிக்கப்படுகின்றதா என்பதை அறிய அதிகாலையில் ஆவலுடன் காத்திருப்போம்.

பெயர்ப் பட்டியலில் தமது பெயர் வந்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். அவர்களிற்கு வார்ட்டினுள் உள்ள நீர்த்தொட்டியில் முகம் கழுவுவதற்கு சிறப்பு தண்ணீர் சலுகை உண்டு. ஏனெனில், வார்டனின் முன் அனுமதியின்றி எல்லாரும் தண்ணீர் தொட்டியில் போய் தண்ணீர் எடுக்கமுடியாது. முகம் கழுவியதும் தம்மிடம் உள்ளதில் ஓரளவு அழகான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். சிலர் மற்றவர்களிடம் ஆடைகளை இரவல் வாங்கி அணிவார்கள். சிறையினுள் காசுப் புழக்கம் உடையவர்கள் (பாதாளக் கோஸ்டி) முகச்சவரம் எல்லாம் எடுத்து, அழகிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சில வேளைகளில் பெரிய உத்தியோகத்தர்கள் மாதிரி டை கூட கட்டிக்கொள்வார்கள்.

சுமார் ஆறு மணியளவில் இவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். மற்றவர்கள் இவர்களை ஆ வென்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள். எமக்கு இவர்கள் போல் நாம் எப்போது வெளியில் கூட்டிச் செல்லபடுவோம் என்று மனதில் ஏக்கமாக இருக்கும். பிணையில் செல்பவர்கள் மற்றைய கைதிகளை கட்டித் தழுவி பிரியாவிடை சொல்லிச் செல்வார்கள். சிலர் தமது வீட்டு முகவரிகளை கொடுத்து வெளியில் செல்லும் கைதிகளிடம் உதவிகள் கேட்பார்கள்.

எம்முடன் இருந்த சில தமிழ்க்கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருந்தார்கள். இவர்கள் பிணைமூலம் வெளியில் வரமுடியாமைக்கான காரணம், இவர்களிற்காக வெளியில் இருந்து செயற்படக்கூடிய ஒரு நபர் இல்லாமை. அதாவது ஒருவரை பிணையில் எடுப்பது என்றால் ஒரு வழக்கறிஞர் வேண்டும். அவருக்கு அப்போது சுமார் 5000 ரூபாய்கள் காசு கொடுக்க வேண்டும். மேலும் தொடர்பு முகவரிகள், மற்றும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் என்று யாராவது இருக்கவேண்டும். இவை இல்லாத நிலையில் ஒருவர் நீதிமன்றத்தினால் வழக்கில் குற்றவாளி இல்லை என்று அறிவிக்கப்படும்வரை சிறையைவிட்டு வெளியில் வரமுடியாது.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், ஒரு தமிழர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டால் அவர் நிரபராதி என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில் அல்லது குற்றச்சாட்டுக்கள் பொலிசாரினால் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில், நீதி மன்றத்தினால் விடுவிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஆறு மாதங்கள் தொடக்கம் முன்று வருடங்கள் வரையாகும். சிலருக்கு இந்த கால எல்லை 5, 7 வருடங்களாகக் கூட இருக்கும். இந்தக் காரணத்தால் தமிழரைப் பொருத்தவரை பிணை - Bail என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எனினும், ஏழ்மையில் உள்ள மற்றும் உறவினர்கள், அறிந்தவர்களுடன் வெளித் தொடர்புகள் அற்ற தமிழ் கைதிகள் பிணை மூலம் வெளியில் வரமுடியாமல் இருப்பதால் அவர்கள் பல வருடங்களாக சிறையினுள் இருந்து தவிக்க வேண்டி இருக்கின்றது. அவர்களிற்காக பரிந்து பேசுவதற்கோ அல்லது அவர்களிற்காக காசு கொடுத்து அவர்களை வெளியில் எடுப்பதற்கோ ஒருவரும் இல்லை. இந்த இக்கட்டான நிலமையில் உள்ள ஒரு தமிழ்க்கைதி எங்கள் "பி வார்ட்டில்" இருந்தார். அவரைப் பார்க்க கவலையாக இருந்தது. எம்மால் அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் சிறைவாழ்க்கை பழகிவிட்டதால், மிருகங்கள் போல் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் மெளனமாக எதுவித எதிர்ப்பையும் காட்டாது தனது வாழ்க்கையை கழித்து வந்தார்.

அந்த சந்தோசமான செய்தி அன்றொரு நாள் அதிகாலை எமக்கு கிடைத்தது. நாம் சிறீ லங்கா அநீதிமன்றத்தின் கட்டளைப்படி பிணையின் மூலம் விடுதலை செய்யப்படுவதற்கு ஆவண செய்யப்பட்டோம். எம்மை சிறையில் தள்ளிய தினத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளின் உறவினர்கள் பலர் பலவிதமாக எம்மை பிணை மூலம் வெளியே கொண்டுவருவதற்கு முயற்சி செய்திருந்தார்கள். ஆனால், ஆரம்பத்தில் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆனால், தமிழ் கைதிகளின் உறவினர்கள் தினமும் எம்மை பிடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று அந்த ஸ்டேசனின் தலைமை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவும், தினமும் அவனை தொலைபேசியில் தொல்லைப் படுத்தியதன் காரணமாகவும். இறுதியில் அவன் பிணைமூலம் எம்மை வெளியே எடுப்பதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை விலக்கிக் கொண்டான்.

காலையில் எமது பெயர் வாசிக்கப்பட்டதில் இருந்து எமக்கு எல்லோருக்கும் நல்ல சந்தோசம். ஆனால், பிரச்சனை என்னவென்றால் போடுவதற்கு ஒழுங்கான உடுப்பு இல்லை. நாம் எல்லோரும் தெருவில் நிற்கும் பிச்சைக்காரங்கள் போடுவது போன்ற நாற்றம் மிக்க கேவலமான உடுப்புகளை போட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லை. களவு போய்விட்டது. எமது கோலம் பார்ப்பதற்கு மிகவும் மோசமாய் இருந்தது. ஆனாலும், இனியென்ன? வீடு சென்று உடுப்பை மாற்றுவது தானே என்ற ஆறுதலுடன் மனதை சாந்திப்படுத்திக் கொண்டோம்.

நாம் வெளியே போகப் போகின்றோம் என அறிந்ததும் சிங்கள கைதிகள் எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தர வேண்டும் என வற்புறுத்தினார்கள். போலீசுகாரரும், காவலாளிகளும், வார்டனும் ஒவ்வொருவராக எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தரவேண்டும் எனவும், அப்போதுதான் நாம் அடுத்தமுறை பிடிபட்டு சிறையினுள் வரும்போது எம்மை தாம் நல்ல முறையில் கவனிப்போம் என்றும் கூறினார்கள். எமக்கும் அந்த நேரத்தில் நாம் மீண்டும் சிறைக்கு வரக்கூடும் போன்ற உணர்வு தோன்றியது. இதனால், அவர்கள் கேட்டபடி காசு தருவதாக வாக்குறுதி அளித்தோம்.

காலை சுமார் ஏழு மணியளவில் நாம் மற்றைய கைதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறை வாயிலுக்கு அருகில் இருந்த ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு பல விசாரணகள், கேள்விகள் கேட்கப்பட்டன (இவை இப்போது எனக்கு நினைவில் இல்லை). கடைசியில் எமக்கு மீண்டும் விலங்குகள் மாட்டி அநீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், சில தமிழ் கைதிகள் "நாங்கள் இப்போது பிணையில் விடுவிக்கப் படப்போகின்றோம் தானே, எனவே ஏன் எங்களுக்கு மீண்டும் விலங்கு மாட்டுகின்றீர்கள்?" என கேட்டு வாதிடதொடங்கினார்கள். இந்த நேரத்தில் எம்மிடம் இருந்து காசு வாங்கவேண்டிய தேவை (கையூட்டு) போலிசாருக்கு இருந்ததால் அவர்கள் நாங்கள் சொன்னதை உடனடியாக கேட்டார்கள். அவர்கள் எம்முடன் இப்போது மிகவும் சினேகபூர்வமாக மாறிவிட்டார்கள். ஏனெனில், நாம் விரைவில் அவர்களிற்கு கையூட்டு கொடுக்கப்போகின்றோம் என்ற சந்தோசத்தில் இருந்தார்கள். எனவே, போலிசார் எம்மிடம் "சரி சும்மாவா வரபோறீங்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டுவிட்டு (அதாவது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டப்படாது) "சரி.. நீங்க சும்மா வரலாம், ஆனா தப்பி ஏதாவது யாராவது போனா, பிறகு திருப்பி இங்க இருக்க வேண்டியதுதான்!" இவ்வாறு எச்சரிக்கை தந்துவிட்டு, லொறி போன்ற ஒரு வாகனத்தில் எம்மை ஏற்றினார்கள்.

வாகனத்தில் நாம் எல்லோரும் பின்னால் இருந்தோம். எம்முடன் நான்கு போலீசுகாரர் ஆயுதங்களுடன் காவலுக்கு பின்னால் இருந்தார்கள். அவர்கள் எம்முடன் பகிடிகள் விட்டு சந்தோசமாக இருந்தார்கள். ஏனெனில், நாம் எல்லோரும் குறிப்பிட்ட அந்த போலிசுகாரரிடம் அநீதிமன்றத்திற்கு சென்றதும் உறவினர்களிடம் காசு வாங்கி கொடுக்கவேண்டும் என சிறையில் சிங்கள குண்டர்களினால் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காவலுக்கு வந்த போலிசுகாரர் எம்மிடம் நாயாய் வழிந்தார்கள். "அட தூ!" என்று அவர்களின் மூஞ்சையில் காறித் துப்ப வேண்டும் போல இருந்தது.

வாகனம் மகர சிறையில் இருந்து வெளியேறி சில மணித்தியாலங்களின் பின் (நான் நினைக்கின்றேன், சிறீ லங்கா அநீதி மன்றத்தை சென்றடைய சுமார் நான்கு மணித்தியாலம் நேரம் பிடித்தது என்று.. சரியாக நினைவில் இல்லை) அநீதி மன்றத்தை - அதாவது எம்மை சிறைக்கு ஆரம்பத்தில் அனுப்பிய அநீதிமன்றத்தை சென்றடைந்தோம். அங்கு motion - பிணை பத்திரத்தில் நாம் ஒவ்வொருவராக கையெழுத்திட்டதும் விடுவிக்கப்பட்டோம். சிறீ லங்கா அநீதிமன்றத்தில் எமது ஏராளம் உறவினர்கள் எமது வருகைக்காக காத்திருந்தார்கள். அநீதிமன்றத்தில் நாம் விடுவிக்கப்படும் போது சிறீ லங்கா அநீதி மன்றத்தினால் சில நிபந்தனைகள் எமக்கு விடுக்கப்பட்டன. அவை...

1. நாம் தினமும் மாலை நான்கு மணிக்கு எம்மை கைது செய்த போலீசு ஸ்டேசனுக்கு சென்று கையெழுத்து இடவேண்டும்.
2. நாம் சிறீ லங்காவை விட்டு வெளியேற முடியாது.
3. எமது வழக்கு மூன்று மாதங்கள் தள்ளி மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்த விசாரணை தேதிக்கு நாம் எல்லோரும் - 18 பேரும் சமூகம் தரவேண்டும்.
4. போலிசார் விரும்பும் பட்சத்தில் நாம் எந்த நேரமும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம்.

எமது இந்த விடுவிப்பு தற்காலிகமானதாக இருந்தாலும் சிறையை விட்டு வெளியே வந்து மூச்சு எடுப்பது மனதில் மகிழ்ச்சியை தந்தது. எம்மை கண்ட உறவினர்கள் எல்லோரும் எமது மோசமான கோலங்களை பார்த்துவிட்டு சத்தம் போட்டு, ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டார்கள். நாம் எல்லோரும் தாடிகள், மீசைகளுடன் சாமியார் கோலத்தில் காட்சி கொடுத்தோம். நான் வெறுங்காலுடன் நிற்பதை கண்ட உறவினர் ஒருவர் எனக்கு உடனடியாக அருகில் இருந்த ஒரு கடையில் Bata செருப்பு ஒன்று வாங்கி தந்தார். வயிறு சரியான பசி. என்னை உடனடியாக அருகில் உள்ள ஒரு சாப்பாட்டு கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டியும் வாங்கித் தந்தார். இதில் பகிடி என்னவென்றால், நாங்கள் ஒருவரும் போலிசாருக்கு கையூட்டு கொடுக்கவில்லை. அவர்களிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நாங்கள் ஆளாளுக்கு எம்மை தேடி வந்த உறவினர்களுடன் ஒவ்வொரு திசைகளில் வீடுகளிற்கு கிளம்பிவிட்டோம். சிறை போலிசார் காசு - கையூட்டு கிடைக்காததையிட்டு ஏமாற்றமும், எம்மில் கோபமும் அடைந்தனர்.

வீட்டிற்கு போனதன் பின்புதான் எனக்கு என்னென்ன சனியன்கள் பிடித்துள்ளது என்று தெரியவந்தது. குளிப்பதற்கு முன் கண்ணாடிக்கு முன் நின்று எனது உருவத்தை பார்த்தபோது என்னாலேயே என்னை நம்பமுடியவில்லை. யாரோ மாதிரி - தெருப்பிச்சைக்காரன் மாதிரி இருந்தது. கிலோ கணக்கில் உடம்பில் படிந்திருந்த ஊத்தைகளை மணித்தியாலக் கணக்கில் தேய்த்து குளித்தபின் சிறிது ஆறிவிட்டு உறங்கிவிட்டேன்.

சாமத்தில் தூக்கம் கலைந்தது. திடுக்கிட்டு எழும்பினேன். நான் படுத்திருக்கும் போது என்னை அறியாமல் ஏதேதோ சொல்லி பிதற்றுவதாய் வீட்டுக்காரர் சொன்னார்கள். எனக்கு தூக்கத்தால் எழுந்ததும் நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேனா அல்லது கொழும்பில் இருக்கின்றேனா அல்லது சிறையினுள் இருக்கின்றேனா என உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரம் கட்டிலில் இருந்து யோசிக்க வேண்டி இருந்தது. மலசலகூடத்திற்கு செல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால், உடனடியாக போகமுடியவில்லை. ஏனென்றால், நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என எனக்கு தெரியவில்லை. இறுதியில் ஒருவாறாக நான் சுதாகரித்து என்னிலை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இரவில் சில மாதங்கள் படுத்திருக்கும் போது பிதற்றுதல், திடீரென்று எழும்பியபின் பிறகு எங்கு இருக்கின்றேன் என்று தெரியாமல் முழுசிக்கொண்டு இருத்தல்... இப்படி பல உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதைவிட முகம், முதுகு தோல்களில் பருக்கள் போட்டு (சின்னம்மைக்கு வருவது போன்று...) பார்ப்பதற்கு அகோரமாக இருந்தது. இந்த தோல் வியாதிகள் மாறுவதற்கு பல வருடங்கள் சென்றது.

எமது வழக்கு சுமார் இரண்டு வருடங்களிற்கு மேல் இழுபட்டது. ஒவ்வொரு முறையும் தவணை போடும்போது, வாழ்க்கை சீ என்று இருக்கும். ஒவ்வொரு முறையும் சிறீ லங்காவின் அநீதிமன்றத்திற்கு போவதற்கு முன் முதல்நாள் இரவு நம்முடன் பிடிபட்ட மற்றையவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்கள் நாளை அநீதிமன்றத்திற்கு வருகின்றார்கள் என்பதை உறுதி செய்துகொள்வோம். ஏனெனில், ஒருவர் வராவிட்டாலும், எமக்கு அநீதிமன்றத்தில் பிரச்சனை வந்துவிடும். ஒருவர் வராததை காரணம் காட்டி வழக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிவிடுவான்கள் (நாங்கள் எல்லாமாக 18 ஒன்றாக பிடிக்கப்பட்டு, ஒன்றாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தோம்). ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளான நாங்கள் கொலைகாரர், கொள்ளைக்காரர், திருடர்கள், பெண்களை கற்பழித்த அயோக்கியர்கள் கூடும் அநீதிமன்றத்தில் ஒன்றாக வைத்து விசாரிக்கப்பட்டோம். இது என்னை மிகவும் பாதித்தது.

இறுதியில் பல துன்பங்களை அனுபவித்தபின், ஒருவாறாக சுமார் இரண்டரை வருடங்கள் சொச்சத்தின் பின் நாங்கள் நிரபராதிகள் என தீர்ப்பு தரப்பட்டு அநீதிமன்றத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டோம். விடுதலையை சிங்களத்தில் நிதாஸ் என்று சொல்வான்கள் என நினைக்கின்றேன். நாங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என அறிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சந்தோசப்பட்டோம்.

சில தனிப்பட்ட காரணங்களால் சில விடயங்களை நான் இங்கு எழுதவில்லை. ஆனால், வெளிஉலகிற்கு சொல்லவேண்டிய சுமார் 95% செய்தியையும் நான் இந்த கதையில் கூறிவிட்டேன். என்னைப்போல் ஆயிரம், ஆயிரம் அப்பாவி தமிழ் இளைஞர்கள் எனது அனுபவத்தை விட மிகவும் பயங்கரமான அனுபவங்களையெல்லாம் சிறீ லங்கா சிறைகளில் பெற்று இருப்பார்கள். இப்போதும் கூட ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறீ லங்கா சிறைகளில் இருந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

சிறைக்குபோய் வந்ததாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட நேரடியான, மற்றும் மறைமுகமான உடல், உளவியல் பாதிப்புக்களாலும் நான் வாழ்க்கையில் அதளபாதாளத்தினுள் தூக்கிவீசப்பட்டேன். எனது வாழ்க்கையை மறுசீரமைக்க பல வருடங்கள் எடுத்தது. வேறு என்னத்தை கூறுவது?

இத்துடன் சுமார் ஐந்து மாத காலமாக இழுபட்டு வந்த இந்த தொடர்கதை நிறைவுக்கு வருகின்றது. கதையை வாசித்து தொடர்ந்து கருத்துக்கள் கூறிவந்த கந்தப்பு, மற்றும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும், மற்றும் வாசகர்களிற்கும் மிக்க நன்றிகள்!

நன்றி! வணக்கம்

இந்த ஆக்கத்தை பிரசுரிக்க அனுமதி அளித்த நண்பர் கலைஞனுக்கு நன்றிகள் இந்த கதை சம்பந்தமான கருத்தாடல்களுக்கு
http://www.yarl.com/forum3/index.php?showtopic=19439&st=80